Monday, February 23, 2009

பிரம்ம பிரயத்தனம்

Manikandan: டேய் டுபுக்கு
KSR: என்னடா ?
Manikandan: நேத்திக்கு என்னோட ப்ளாக் படிச்சுட்டு கமெண்ட் போடறேன்னு சொன்ன தான ?

KSR: காலைல உயிர வாங்காத...இப்ப தான் ஆபீஸ் வந்தேன்.
Manikandan: நீ தானடா சொன்ன. சொல்லும் பேச்சும் ரொம்ப முக்கியம்டா.

டேய்...
--------------
-------------
சூனியம் வச்சிடுவேன் மச்சி.
KSR: இன்னிக்கு E.O.B குள்ளார கமெண்ட் போடறேன். வெயிட் பண்ணு.
Sent at 7:04 AM on Monday

Manikandan: ஹாய் டா இருக்கியா ?
sent at 1:03 PM on Monday

Manikandan: டேய் கபோதி, இருக்கியா இல்ல செத்து கித்து போய்ட்டியா ?
sent at 3:15 PM on Monday

KSR: டேய் மணி, எப்படிடா கமெண்ட் போடணும் ?
Manikandan: அது சரி. படிச்சு முடிச்ச உடன கமெண்ட்ஸ்ன்னு ஒண்ணு இருக்கும் பாரு. அத கிளிக் பண்ணு. அதுக்கு அப்புறம் உன்னோட கமெண்ட்ஸ் எழுதிட்டு அனானிமஸ் பட்டன் செலக்ட் பண்ணி சப்மிட் பண்ணு.
sent at 4:11 PM on Monday

Manikandan: டேய் என்னடா ஆச்சு ?
KSR: கமெண்ட் போடறது ரொம்ப காம்ப்ளெக்ஸா இருக்கே.
Manikandan: கன்னாபின்னானு வாய்ல வருது
KSR: இருடா. இருடா. இன்னும் 2 hoursல போடறேன். இப்ப wife கூட போன்ல இருக்கேன்.
sent at 5:02 PM on Monday

Manikandan: குட்மார்னிங், என்னடா பண்ற ?
KSR: ஹலோ மணி, நான் ஸ்ருதி. எப்படி இருக்கீங்க ? அவர் இப்பதான் குளிக்க போனாரு.
Manikandan: நல்லா இருக்கேன். பையன் எப்படி இருக்கான் ?
KSR: அவனுக்கு என்ன ? சூப்பரா இருக்கான். பக்கத்துலயே தான் இருக்கான்.

Manikandan: oh. வெப்காம் போட்டு விடுங்க. பையன் கிட்ட பேசலாம்.
sent at 6:56 AM on Tuesday

KSR: டேய் மணி, காலைல buzz பண்ணினயா ?

Manikandan: செருப்பால அடிப்பேன் ........ ...கமெண்ட் போட சொன்னா பொண்டாட்டி பேருல பேசறயா நீ ?
KSR: :)-
sent at 11:13 AM on Tuesday

19 comments:

Vidhya Chandrasekaran said...

இப்ப என்ன கமெண்ட் தான போடனும். இந்தாங்க பிடிங்க.

மணிகண்டன் said...

இல்லைங்க. ksr கமெண்ட் போடனுமே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

கமெண்ட் தானே போட்டாச்சு நானும்

கார்க்கிபவா said...

:))))))))))

மணிகண்டன் said...

ராதாகிருஷ்ணன் மற்றும் கார்க்கி - நன்றி.

Anonymous said...

டேய் மணி ! நல்லா எழுதிருக்கடா

மணிகண்டன் said...

அனானி KSR அண்ணாத்தே,

அவரு பேரு KSR கிடையாது ! வேணும்னே தான பேரு மாத்தி போட்டேன் ! இல்லாட்டி டண்டனக்கா தமிழன், டன்மான டமிலன் உள்ளார பூந்துருவீங்கன்னு !

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...
கமெண்ட் தானே போட்டாச்சு நானும்
//


நானும் தான் !

நம்ம மணியாச்சே !

மற்றும் ஒரு காதலன் said...

பிலாக் எழுதறது கூட சுலபம் தான். ஆனா, இந்த கமெண்ட் பிச்சை எடுக்கரதுக்குளே
உயிரே போய்டுது...இன்னும் என்சங்கத்துல ஒரு கமெண்ட் வாங்க, 4,5 மாசம் ஆயிடுச்சு..நீங்க கொடுத்து வச்சவங்க..

http://valibarsangam.wordpress.com

Saravanan S

Anonymous said...

வந்துட்டேன்!

Anonymous said...

நானும் வருவேன்

தமிழன்-கறுப்பி... said...

13

தமிழன்-கறுப்பி... said...

14

தமிழன்-கறுப்பி... said...

15

தமிழன்-கறுப்பி... said...

16

தமிழன்-கறுப்பி... said...

அட இதுக்கு இப்படியும் ஒரு வழி இருக்கா...?
;)

anujanya said...

எதோ என்னால முடிந்தது. சூப்பர் பதிவு :)))))

அனுஜன்யா

மணிகண்டன் said...

தமிழன் கறுப்பி - எல்லாத்துக்கும் வழி இருக்கு ! பொறுமை தான் வேணும்.

யூத் - உங்க வருகைக்கு நன்றி. இன்னும் கொஞ்ச நாள்ல கவிதை எழுதுவேன். அப்ப மட்டும் நீங்க வராம இருங்க !!

Anonymous said...

இது காமெடி பிச்சைங்கண்ணா...

நல்லா இருந்துச்சு.

இத பாருங்க நீங்க கேட்டதுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போடலை..உங்க எழுத்து பிடிச்சிருந்தது (எப்படி? மத்தவங்க என் கமெண்ட்ஸ் படிச்சா நீங்க பிச்சை எடுத்ததோ இல்லா நான் அதுக்காக பின்னூட்டம் போட்டதோ யாருக்கும் தெரியாது)ஹி..ஹி..ஹி..