Monday, July 24, 2023

Tuesday, September 21, 2021

அகம்பாவம் அற்ற நான்

அகம்பாவம் அற்ற நான் என்றும் போல இன்றும் கருப்பு வெள்ளையில் கசங்கி நானாகவே இருக்க முயன்று வருகிறேன்

Friday, June 10, 2011

ஐபிஎல் - ஒரு விவாதம்

ஐபிஎல் - ஒரு விவாதம் (நன்றி புதியதலைமுறை)

ஐபிஎல் 2011ன் நாயகனாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்
அனைவரின் ஒருமித்த தேர்வாக கிரிஸ் கெய்ல்தான் இருப்பார். எதிராக பந்து வீச வேண்டிய பவுலர்கள் கெய்ல் புயலால் திக்குமுக்காடி காணாமல் போனார்கள். இங்கே கெய்ல் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவருடைய மேற்கு இந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்றதை பார்த்திருக்கலாம். அவர்கள் தோற்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை அதுதான். ஆனாலும் க்ரிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவு அணிக்கு விளையாடி இருந்தால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் இல்லையா?

அவர் மட்டுமல்ல அருமையான பந்துவீச்சாளரான லசித் மலிங்கா.. ஐபிஎல்லுக்காக இலங்கை அணியின் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார். பிரட் லீ, ஷான் டைட் போன்றவர்களும் இதே வழியில் தங்களது ஓய்வை அறிவித்து உள்ளனர். தனிப்பட்ட அளவில் இவர்களது முடிவில் உள்ள நியாங்கள் புரிந்தாலும், கிரிக்கெட் பார்வையில் பார்க்கும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களான கம்பீர் மற்றும் சேவாக் இருவரும் உலககோப்பை வெற்றிக்கு பெரும் தூண்களாக இருந்து உதவியதை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஆனால் அடுத்த மாதம் இந்திய அணி , மேற்கு இந்திய தீவிற்கு செல்லும்போதோ அல்லது இங்கிலாந்து செல்லும்போதோ இவர்கள் அணியில் இடம்பெறுவார்களா என்பது சந்தேகமே ! தங்களது உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் ஐபிஎல்லில் விளையாடும்போது ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம் இல்லையென்றால் உலகக்கோப்பையில் காயமடைந்த உடலுடன் ஐ பி எல் விளையாடியதும் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவை சேர்ந்த பல இளம் வீரர்களை ஐ பி எல் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இந்த இளம்வயதிலேயே பெரிய வாய்ப்புக்கள் கிடைக்கும்போது 20-20 க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தங்களது முழுத்திறனை வளர்த்துக்கொள்ளாமல் மழுங்கி விடுவார்கள்.

குறிப்பாக லக்ஷ்மணை போலோ, திராவிடை போலோ ஆட்டக்காரர்கள் கிடைப்பார்களா ? சுழல் பந்து வீரர்கள் பந்தை சுழற்ற முயற்சியாவது செய்வார்களா ? இவற்றை எல்லாம் சரியாக தெரிந்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் டி20 போட்டிகள் ஒருநாளும் பயன்படாது.

இந்த போட்டிகளின் தொலைக்காட்சி உரிமை கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டிகளின் எண்ணிக்கையை கூட்ட ஸ்பான்சர்களிடம் இருந்து அழுத்தம் இல்லாமலா இருக்கும் ? இது இன்டர்நேஷனல் போட்டிகளை நிச்சயம் பாதிக்கும். வீரர்களின் பங்கேற்பு குறித்து அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஒரு திடமான அணுகுமுறையை கொண்டு வர பயப்படுகிறார்கள். சின்னஞ்சிறு கிரிக்கெட் நாடுகளான நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் விளையாடும் வீரர்கள் தனது நாட்டிற்கான போட்டியை விட ஐபிஎல்க்கே முக்கியத்துவம் தருவார்கள் என்பது திண்ணம்.

நன்றி புதியதலைமுறை

நன்றி அதிஷா

Wednesday, January 19, 2011

பிரதிபலிப்பு.

மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை
சிந்திக்கும் மனம் கொண்ட நான்
தற்கொலை குறித்து வரும்
எண்ணங்களை விரட்ட யத்தனிப்பதில்
உள்ள முரண்பாட்டை
பரிசுத்தமான கழிவறையில் உள்ள
என் முகம் பிரதிபலிக்கிறது.

Friday, August 20, 2010

ட்ரிப்

ஜஸ்ட் இரண்டு வார இந்திய ட்ரிப்.

குட்டிப்பையனுக்கு ஒரு வயசு கம்ப்ளீட் ஆயிடுச்சு. காது குத்தறபோது பயந்தளவுக்கு அழல.

ட்ரிப் பயங்கர ஹெக்டிக். சென்னைல வெறும் ட்ரான்சிட் மட்டும் தான்.

பெங்களூர்ல மூணு நாள் இருந்தேன். ட்ராபிக் ஜாம் கம்மி ஆகி இருக்கு. நண்பரோட கார் எடுத்து ஓட்டலாம்ன்னு யோசிச்சேன். பட், ஓட்டல. ஹூடி பக்கத்துல ரெண்டு வருஷமா முடிக்காம பூட்டி போட்டு இருந்த அபார்ட்மென்ட் போய் பார்த்தேன். பூட்டிட்டு திரும்பி வந்தேன்.

கொஞ்சம் நண்பர்கள் மீட் பண்ணினேன். ஐசிஐசியை பேங்க் போனேன். எழுத்தாளர் கோணங்கியை சந்திச்சேன். நடிகை நேஹா தூபியாவை பார்த்தேன். அத தவிர ஆடி 18போது காவேரி கரைல இருந்தேன். ஒரே ஒரு நாளைக்கு தண்ணி ஃபுல்லா ஓடிச்சு.

இந்தமுறை ட்ரிப்ல சுவாரசியமா நடந்த சம்பவம் எல்லாம் ப்ளாக் எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருந்தேன். தொலைஞ்சி போயிடிச்சி. அதுனால உங்க எல்லாருக்கும் அத்தியாவசியமா தெரியவேண்டிய மிக சுவாரசியமான சம்பவங்களை மட்டும் ஞாபகத்தில் இருந்து மேலே எழுதி இருக்கேன்.

(சுவாரசியம் தொடரும்)

1) பயணம் ஜெட் ஏர்வேஸ் விமானத்துல.

3) ஓட்ட நினைச்ச கார் சான்ட்ரோ.

4) பூட்டின பூட்டு கோத்ரேஜ்.

5) காவேரில தண்ணி ஃபுல்லா ஓடின தேதி ஆடி 18.

6) மீட் பண்ணின நண்பர்கள் பேரு ரகு அண்ட் சங்கர்.

7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.

(சுவாரசியம் முற்றும்)

8) ஸாரி. நான் போன ஐசிஐசியை பேங்க் பிரான்ச் திருச்சி தில்லைநகர்ல.

Thursday, May 6, 2010

விதி

உணர்ச்சிக்கு வடிகாலாக எழுது.
எழுதியதை வகைப்படுத்து
வகை இலக்கணத்தைப் பரிச்சயம் செய்துகொள்
திரும்ப எழுதியதை படி.
கிழித்தெறி அல்லது திருத்து.
தெரிந்து செய்யும் இலக்கண பிழைகளில் கவித்துவம் மிளிரும்.
எழுதியதை திரும்பப் படி
அல்லது
திரும்ப எழுதியதை படி.
செப்பனிடு செப்பனிடு.
படித்துப் பார். தூரச் சென்றிருப்பாய்.
பிரதியிலிருந்து படைப்பவன் விலகும் தருணம் இது.

Sunday, March 7, 2010

கிச்சடி - 07/03/2010

இங்கு நடந்த லோக்கல் முன்சிபல் தேர்தலில் கீர்ட் வில்டர்சின் கட்சி பங்குபெற்ற இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொரு இடத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர். ஒரு அடிப்படைவாதக் கட்சியின் (முஸ்லிம்களுக்கு எதிரான) வெற்றி ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்தலாம். மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல். மறுபடியும் ஆப்கானுக்கு குறைந்த அளவில் ராணுவம் அனுப்ப ஆளும்கட்சி முடிவெடுத்ததால் கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வில்டர்ஸ் கட்சி வெற்றி பெற்றால் ? இதை தான் கேட்ச் 22 என்று சொல்கின்றனர்.

திருச்சியில் எனது நெருங்கிய நண்பனின் பெயர் தாயுமானவன். நல்ல புத்திசாலி. பொறியியல் படிப்பை முடித்த இரண்டு வருடத்தில் திடீரென்று ஜக்கி வாசுதேவ் ஆசுரமத்தில் சேர்ந்தான். உடனடியாகவே பிரம்மச்சரியம் வேறு தரப்பட்டது. சேர்ந்த புதிதில் அதை நான் எஸ்கேபிசம் என்றே நினைத்தேன். பலமுறை ஆசிரமம் சென்று அவனை திரும்ப அழைத்து வர முயன்றோம். எதற்கும் அசையவில்லை. இவை நடந்தது பதினோரு வருடங்களுக்கு முன்பு. இன்று வரை அவன் அங்கு அருமையாகவே இருந்து வருகிறான். Hopefully for his sake, I wish jakki is not proved fake during our life time.

நம்பிக்கை என்றால் என்ன ?

ஏதாவது சாமியாரை பின்பற்ற யோசனை இருந்தால், இறந்தவர்களாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

சச்சின் டெண்டுல்கர் 200 அடித்ததை பார்க்க முடியவில்லை. அருமையாக ஆடி இருக்கவேண்டும். இனி பலரும் இரட்டை சதம் அடிப்பார்கள் என்றே அனுமானிக்கிறேன். வெறும் அனுமானம் மட்டும் தான். ஜோதிடம் எல்லாம் இல்லை !

எனது மகன் அடிக்கடி Nick Hits என்ற சேனலில் ஆங்கிலப் பாடல்களை விரும்பி பார்க்கிறான். நல்லவேளையாக தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் Sun News சேனல் பார்க்க நேரிட்டிருக்கலாம்.

Galerianki என்ற போலிஷ் மொழி திரைப்படம் முடிந்தால் பாருங்கள். தமிழ் பதிவுகளில் விமர்சனம் முன்பே விமர்சனம் எழுதப்பட்டு இருக்கலாம். Designer wear அணிவதற்காக / வாங்குவதற்காக விபசாரத்தில் ஈடுபடும் mall girls பற்றிய படம். போலந்தில் ஒருவித கலகத்தை ஏற்படுத்திய படம்.

கடந்த பதிவில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை படித்த ஒரு பிரபல பதிவர் உங்களுக்கு பதிவு வியாதியா என்று கேட்டார். அவரிடம் கவிதை வெறும் புனைவு தான் என்று கூறி தப்பித்துக்கொண்டேன். பொய் சொல்லியிருந்தாலும் மறுபடியும் அதுபோன்ற தவறுகளை செய்வதாக இல்லை.

கடந்த ஒரு மாதத்தில் ஏன் பதிவு எழுதவில்லை என்று ஒருவர் கூட கேட்கவில்லையே ? இதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா ?

அதிஷாவின் திருமணத்தில் பல பதிவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தம்பதிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.