Friday, August 20, 2010

ட்ரிப்

ஜஸ்ட் இரண்டு வார இந்திய ட்ரிப்.

குட்டிப்பையனுக்கு ஒரு வயசு கம்ப்ளீட் ஆயிடுச்சு. காது குத்தறபோது பயந்தளவுக்கு அழல.

ட்ரிப் பயங்கர ஹெக்டிக். சென்னைல வெறும் ட்ரான்சிட் மட்டும் தான்.

பெங்களூர்ல மூணு நாள் இருந்தேன். ட்ராபிக் ஜாம் கம்மி ஆகி இருக்கு. நண்பரோட கார் எடுத்து ஓட்டலாம்ன்னு யோசிச்சேன். பட், ஓட்டல. ஹூடி பக்கத்துல ரெண்டு வருஷமா முடிக்காம பூட்டி போட்டு இருந்த அபார்ட்மென்ட் போய் பார்த்தேன். பூட்டிட்டு திரும்பி வந்தேன்.

கொஞ்சம் நண்பர்கள் மீட் பண்ணினேன். ஐசிஐசியை பேங்க் போனேன். எழுத்தாளர் கோணங்கியை சந்திச்சேன். நடிகை நேஹா தூபியாவை பார்த்தேன். அத தவிர ஆடி 18போது காவேரி கரைல இருந்தேன். ஒரே ஒரு நாளைக்கு தண்ணி ஃபுல்லா ஓடிச்சு.

இந்தமுறை ட்ரிப்ல சுவாரசியமா நடந்த சம்பவம் எல்லாம் ப்ளாக் எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருந்தேன். தொலைஞ்சி போயிடிச்சி. அதுனால உங்க எல்லாருக்கும் அத்தியாவசியமா தெரியவேண்டிய மிக சுவாரசியமான சம்பவங்களை மட்டும் ஞாபகத்தில் இருந்து மேலே எழுதி இருக்கேன்.

(சுவாரசியம் தொடரும்)

1) பயணம் ஜெட் ஏர்வேஸ் விமானத்துல.

3) ஓட்ட நினைச்ச கார் சான்ட்ரோ.

4) பூட்டின பூட்டு கோத்ரேஜ்.

5) காவேரில தண்ணி ஃபுல்லா ஓடின தேதி ஆடி 18.

6) மீட் பண்ணின நண்பர்கள் பேரு ரகு அண்ட் சங்கர்.

7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.

(சுவாரசியம் முற்றும்)

8) ஸாரி. நான் போன ஐசிஐசியை பேங்க் பிரான்ச் திருச்சி தில்லைநகர்ல.