Thursday, September 24, 2009

கிச்சடி - உபோஒ மவுனத்தின் மொழிக்கு எதிர்வினை

கார்க்கியோட வேட்டைக்காரன் பாடல் விமர்சனம் படிச்சுட்டு பாட்டு கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சி மனசு விட்டு சிரிச்சேன்.

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம், எதிர்விமர்சனம், தார்மீக கோபம், கிண்டல்கள், மவுனத்தின் மொழி, பார்ப்பனீயம், ஆபாசம்.

எல்லாரும் பின்னூட்டத்துல ஜ்யோவ்ராம் சுந்தர் கிட்ட எதுக்கு நியாயம் கேக்கறாங்கன்னு தெரியல.

சரியோ / தவறோ விமர்சனம் தைரியமா பல பேரு எழுதினாங்க. சரியோ / தவறோ பலபேர் அதற்கு எதிர்வினை செஞ்சாங்க.

விமர்சனம் எழுதினவரை விளக்கம் கேட்டா கவிதை எழுத போன்னு சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்கும் சுகுணா திவாகர் வாழ்க.

நல்லவேளையா நேர்மை என்பது ஒரு பண்பு - அவ்வளவேன்னு எந்த பதிலும் இல்லை.

நீரஜா என்னும் பார்ப்பனீய பெண்ணை கொண்டு நீதி கொடுக்கும் கமலேன்னு வாய்ஸ் கொடுப்பாரு.

மவுன மொழி மூலமா நீரஜா பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சத கூட விட்டுடலாம்.

பொண்ணு பேரு வரும் போது எல்லாம் mute பண்ணிட்டு மவுன மொழி அர்த்தம் கண்டுபிடிச்சா என்ன செய்ய !

அதை சுட்டிக்காட்டினா "தகவல் பிழையாம்". அந்த பொண்ணு பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சி கமல் கிட்ட கேட்ட நீதி எல்லாம் ?

நடிகை பேரு அனுஜா ஐயர்ன்னு எங்கயாவது படிச்சு இருப்பாரு. படத்தையே பாக்காம பப்ஸ் தின்னுட்டு விமர்சனம் எழுதி இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இடைவேளைல பப்ஸ் திங்கறவன் காமன் மேன். முழுசா பப்ஸ் தின்னுக்கிட்டே படம் பாக்காம வந்தா பல்ப் எரியற மேன் போல.

ஒரு ஏட்டு மோகன்லால் கிட்ட கமலை பத்தி விவரிப்பாரு - ‘‘அவர் தாடி வச்சிருந்தாரு, கையில வெங்கடாசலபதி பை வச்சிருந்தாரு’. உடனே மோகன்லால் சிலுவை போட்டு இருந்தாருன்னு கேப்பாரு. மவுன மொழி சொன்னது இது தான்.

வெங்கடாச்சலபதி - இந்து, சிலுவை - கிறிஸ்தவன், தாடி - முஸ்லீம்.

சுகுணா பப்ஸ் தின்னுட்டு, தக்காளி சாஸ் கிடைக்காத கடுப்புல தாடி வச்சவன் எல்லாம் இஸ்லாம் தீவிரவாதின்னு கமல் சொன்னாருன்னு மவுன மொழி விமர்சனம் எழுதுவாரு. அதை படத்தோட விமர்சனமா எடுத்துக்கணும். இதை விட படத்தை வெறும் பொழுதுபோக்கா எடுத்துக்கறது ஆபத்து போல.

கமலோட தீவிரவாதம் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஸ்ரீபெரும்புதூர் வரை நீளுதாம். கமல் விடுதலைபுலிகளுக்கு எதிரியாம்.
கமல் துர்நிகழ்வுன்னு சொல்லி இருக்கலாம்.

குண்டுவெடிப்பு சொல்லி தான பதினெட்டு வருஷம் இந்திய அரசியவாதிங்க ஜல்லி அடிக்க முடிஞ்சது. அதை கமல் தீவிரவாதம்ன்னு சொல்லி இருப்பாரோ என்னவோ. மவுன மொழிக்கு அர்த்தம் தான. எதை வேணும்னாலும் எழுதலாமே. அது தான் கருத்து ஆயிடுமே.

சரி. இவ்வளவு மவுன மொழிக்கு அர்த்தம் கண்டுபிடிச்ச விமர்சகர் படத்துல நேரிடையா வந்த பெண்ணோட கையை பின்னால கட்டுறது, கிருஷ்ணா, லால் கிருஷ்ணான்னு கூப்பாடு போடுறது, மோதி பாருன்னு சொல்றது - இதைப் பத்தி எல்லாம் பேசாம மவுனமா இருப்பாராம். நிறுவ வரும் கருத்துக்கு எதிரா இருந்தா சும்மா இருக்கறது தான நேர்மை. இல்லாட்டி அதை rationalize பண்ண ஒரு ரெண்டு பத்தி எழுத வேண்டி வரும்.

செல்வேந்திரன் பதிவை நான் ஆடிக்கு ஒருதடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் படிக்கற வழக்கம். ஆனா புன்னரசியல் பதிவை படிச்சேன். ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கற சாக்கடைல தான நாமும் கலக்கறோம்ன்னு நினைச்சாரோ என்னவோ.

99 - 1 எல்லாம் அபார கண்டுபிடிப்பு. மிச்சம் எல்லாரும் சினிமால வரும் மவுன மொழியை புரிஞ்சிகிட்டா இவரு சமூகத்தோட மவுன மொழியை கூட புரிஞ்சிப்பார் போல.

போலி டோண்டு பிரச்சனை நடக்கும்போது நான் தமிழ் வலைப்பதிவுகள் படிச்சது கிடையாது. ஆனா இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா புரியுது. உன்னை போல் ஒருவன் சம்பந்தமா 60 பதிவு வந்தா எல்லாத்தையும் படிக்கணும் போல. இல்லாட்டி நரசிம், கார்க்கி மாதிரி ஆகிடும். நீங்க தான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே ஜ்யோவ். எல்லா எடத்துக்கும் ஒரே பார்முலா கிடையாதுன்னு. அப்புறம் எதுக்கு கேள்வி ? அவங்க புரிஞ்சிகிட்டாங்களோ என்னவோ.

சரி, இந்த படத்துல நாலு இந்து தீவிரவாதி போட்டு வேன்ல காஷ்மீரீ பண்டிட்ட்னு சொல்லியோ, கோத்ரா ரயில் எரிப்பு சொல்லியோ, கோயம்புத்தூர் பாம்ப் ப்ளாஸ்ட் சொல்லியோ இந்து தீவிரவாதி விளக்கம் கொடுத்தா விமர்சனம் எப்படி இருக்கும் ?

தீவிரவாதியா நாலு chimpanzee காட்டி இருக்கலாம். PETA, Blue Cross வராம இருந்தா.

பேரு இல்லாத தீவிரவாதி தான் பெஸ்ட் சாய்ஸ்.

தீவிரவாதிக்கு பதிலா நாலு திருடனை போட்டு இருக்கலாம். திருட்டுக்கு ஏழ்மை தான் காரணம். அன்பே சிவம்ல கம்யூனிசம் பேசின கமல் தன்னை போலி கம்யூனிஸ்ட்ன்னு நிரூபிச்சிட்டாருன்னு மவுன மொழி பேசுவாங்க. ஆனா விமர்சகரை ஏதாவது சொன்னா நண்பர் சி மணி பச்சையம் கவிதையை ஒட்டி மொழில விளையாடுவார். நமக்கு வருமா ?

சம்பந்தப்பட்ட பதிவுகள்

www.athishaonline.com
jyovramsundar.blogspot.com
suguna2896.blogspot.com
selventhiran.blogspot.com
www.narsim.in

ஆசிப் அண்ணாச்சி ப்ளாக் லிங்க் தெரியலை. கமெண்ட்ல சொல்லுங்களேன். அவர் வெறும் இலக்கியம் மட்டும் எழுதுபவர்ன்னு வராம இருந்தேன் !!!

கமலின் மிக சாதாரணப் படங்களில் இதுவும் ஒன்று.

சற்று அழுத்தமாக / மக்களுக்கு எடுத்து செல்லும் விதத்தில் இந்த படத்தில் உள்ள பொதுமைப்படுத்தும் கூறுகளை சென்ஷி விமர்சனமாக எழுதி இருக்கிறார். படிக்க http://senshe-kathalan.blogspot.com/

லக்கிலுக் விமர்சனம் கூட நடுநிலையா இருந்தது. ஆனா படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இஸ்லாமியர் மீது வெறுப்பு மண்டிவிடும்ன்னு சொல்றது கொஞ்சம் ஓவர். எனக்கு வரலை. நானும் தேர்தல்ல சினிமாகாரங்களுக்கு வாக்கு போடுபவன் தான்.

Wednesday, September 23, 2009

தேடல்

தேடுபொருள் ஆனது கவிதை
பிரக்ஞை கூறு போன்ற குறிச்சொற்களால்
அடுத்த அறையில் தனது தாயின்
குரலைக் கேட்ட குழந்தை
"அம்மா, உன்னைய காதுல பாத்தேன்"
என்று கூறும்வரை.



Monday, September 21, 2009

என் 50 வது பதிவு - உயில்

செல் / அரிக்கப்பட்ட உடம்பு / இன்றே உயில் எழுத வேண்டும் / உயிருள்ள போதே / அழிக்க வேண்டும் / மாற்ற வேண்டும் / காலம்/ பாடம்
/ தாய் தந்தை - கணவன் - காதலன் / ஒலை / காகிதம் / இன்றே உயில் எழுத வேண்டும்
/ கணவன் காதல் காதல் / கணவன் / காதலன்/ நினைவுகளை / மிச்சத்தை / எஞ்சியிருக்கும் / இன்றே உயில் எழுத வேண்டும்
/ Conditions Apply /


Thursday, September 17, 2009

ஸ்போர்ட்ஸ்

சேஃப்டி காரை கொண்டு வந்தால் அலான்சோவை வெற்றி பெற வைக்கமுடியும் என்று ரெனால்ட் டீம் நம்பியதால் மற்றொரு டிரைவரான பிக்கட் ஜூனியர் தனது காரை தொண்ணூறு மைல் வேகத்தில் தடுப்பில் மோதிய படங்கள்.


Rugby ஆட்டத்தில் ஒரு வீரர் ரத்தம் வரும் பொழுது substitute செய்யப்பட்டால் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுபடியும் வந்து விளையாட முடியும். நீங்கள் படத்தில் காண்பது வில்லியம்ஸ் என்ற பிளேயர் கோடம்பாக்கத்தில் கிடைக்கும் Blood Capsule கடித்து ரத்தம் கக்கும் காட்சி.


"Are you questioning my integrity & honesty ?" கேட்ச் பிடித்ததாக அப்பீல் செய்த ரிக்கி பாண்டிங் ரிப்போட்டரிடம் கேட்ட எதிர்கேள்வி



டிஸ்கி :- முதல் இரண்டு படங்களுடன் மூன்றாவதையும் இணைத்த எனது நாணயத்தை கேள்வி கேட்டால் "Are you questioning my integrity & honesty" என்ற எதிர்க்கேள்வி கேட்கப்படாது.

Wednesday, September 16, 2009

சஷி தரூரின் ட்விட்

"Tell us minister, next time you travel to Kerala, will it be cattle class?"
Absolutely, in cattle class out of solidarity with all our holy cows."

சஷி தரூரின் நகைச்சுவை உணர்வு அபாரம்.
மனதில் பட்டதை உடனே தெரிவித்துவிட ஏதுவாக ட்விட்டர். யோசிக்க நேரம் கிடைத்து இருந்தால் இவர் இப்படி எழுதி இருப்பாரா என்பது சந்தேகமே ! வாழ்க ட்விட்டர் ! வளர்க addiction.

காங்கிரஸின் austerity டிரைவ் மீது இவருக்கு இருக்கும் விமர்சனத்தை மேலிடத்தில் முன்பே தெரிவித்து இருக்கலாம். மேலிடமும் இவர்களிடம் பேசிவிட்டு திட்டத்தை மக்களிடம் அறிவித்து இருக்கலாம்.

political fallout ஐ தடுக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கலாம். அதற்கு பதிலாக இவரின் கருத்துக்கான காரணத்தை புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். சிக்கனத்தை கடைபிடி என்று ஆணையிடுவதற்கு பதிலாக நடவடிக்கைக்கான காரணம்/தேவை/ நன்மை/ மக்களுக்கு கூற விரும்பும் மெசேஜ் போன்றவற்றை விளக்கலாம். கட்டாயத்தை சஷி தரூர் ட்விட்டி விட்டார். சென்சிடிவிட்டி புரிந்து கருத்து சொல்லி இருக்கவேண்டும் என்று உளருவதை விட்டு அனைவருக்கும் புரியும் விதமாக திட்டத்தை விளக்குவதே காங்கிரஸின் கடமை.

சரோஜினி நாயுடு காந்தியின் மூன்றாம் வகுப்பு பயணத்தை கிண்டல் செய்ததை நினைவு கூர்ந்தால் கருத்து வேற்றுமைக்கான காரணம் எளிதாக புரியும். சிலருக்கு Austerity க்கான தேவையை புரிந்து கொள்வது கடினம். அவர்களுக்கு காந்தியின் மூன்றாம் வகுப்பு பயணம் மற்றும் அவரின் costume விளம்பரமாக தான் தெரியும் அல்லது தேவையற்றதாக தெரியும். தியாகங்கள் கேள்விக்குறியாக்கப்படும். அவர்களுக்கு புரியவைப்பது தான் தீர்வு. எதிர்நடவடிக்கை அல்ல.

Tuesday, September 15, 2009

கிச்சடி - 15/09/09

அடுத்த மதர் சுப்பீரியர் kim clijsters போல.

மகளிர் டென்னிஸ் மிகவும் சுவாரசியமானது. கடந்த நான்கைந்து வருடங்களாக பலரும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர். இதை ஒரு பலவீனமாக சித்தரிக்கின்றனர். சரியா ?

சச்சின் பைனலில் செஞ்சுரி அடித்ததால் compaq கப்புக்கு மற்றுமொரு ஒரு பைனல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

WWF ரூல்ஸ் புத்தகமாகவோ லிங்காகவோ கிடைக்குமா ?

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலம் பெற்று வரும் வேளையில் வரலாற்றை மாற்றி எழுதும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது உலகப்போருக்கு முதல் காரணமாக சோவியத்தை சித்தரிக்க தொடங்கியுள்ளனர். யூதர்களுக்கு எதிராக எஸ்டோனியா மற்றும் லித்துவானியா போன்ற நாடுகள் செய்த வதைகளை தள்ளுபடி செய்தும் வருகின்றனர்.

ஆதி என்பது தமிழ் சொல் இல்லையாம். ஆதலால் அதை முதலி என்று மாற்றி அகரமுதலி என்று டிக்ஷனரியை எழுத வேண்டுமாம். திருவள்ளுவரை வடமொழி புலவராக மாற்ற ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சியாக இருக்குமோ ?

சச் கா சாம்னா (உண்மைக்கு வெகு அருகில்) என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. 21 கேள்விகளுக்கு உண்மை மற்றும் கூறுபவர்களுக்கு ஒரு கோடி. செம டீல் ! ஒரு சில குளறுபடிகள் இருக்கின்றன. 50 கேள்விகள் கேட்கின்றனர். அவற்றுக்கான பதிலை POLYGRAPH மூலம் சோதிக்கின்றனர். அதே கேள்விகளை நிகழ்ச்சியின் போது மறுபடியும் கேட்கின்றனர். முன்பு எடுத்த POLYGRAPH மூலம் பதிலை உண்மையா / பொய்யா என்று முடிவு எடுக்கின்றனர்.
போட்டியாளர் ஒரு குடிகாரர். கல்யாணத்திற்கு பிறகும் மற்ற பெண்களுடன் தொடர்பு உள்ளவர். அவருக்கு ILLEGITIMATE CHILD இருப்பதும் இப்போட்டியின் முதல் கேள்விகளின் மூலம் அவரின் தந்தைக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு ஒரு கேள்வி : உங்கள் எண்ணப்படி உங்கள் தந்தைக்கு உங்களின் மேல் பெருமை உண்டா ? போட்டியாளரின் பதில் : இல்லை. அதை தவறு என்று POLYGRAPH ரிசல்ட்(முதல் கேள்விகளின் பதில்கள் அவர் தந்தைக்கு தெரியும்முன் எடுக்கப்பட்ட) கூறியதால் அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். உண்மை, பொய் என்ற புள்ளிகள் time என்ற coordinate க்கு கட்டுப்பட்டது.

சமீபத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள அருமையான பூங்கா ஒன்றில் ஆறு வயது தாண்டிய சிறுவர் சிறுமியர் சிலம்பம் பயிற்சி செய்வதை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது.

யு எஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் மகளிர் பட்டதை வீனஸ் மற்றும் செரினா வென்றார்கள். அவர்களின் post match interview :-

TIM CURRY: Thanks for joining us for our press conference with our 2009 US Open women's doubles champions. We ask that any questions in today's press conference refer to events of today only.

With that, we'll open the floor.

Q. Congratulations Venus and Serena on your doubles championship. As it relates to events of today, you issued a statement as it relates to your actions the other night. Why did it take 48 hours for you to release the statement?

Saturday, September 12, 2009

குட்டிப்பையன்


என்னோட செல்லப்பையனை பத்தி எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே எவ்வளவு நாள் தான் இருக்கறது. ஒரு மாசமா பதிவு எழுதாம இருந்தாச்சு. கமெண்ட் எழுதறதையும் ஓரளவுக்கு குறைச்சாச்சு. இது எல்லாத்துக்கும் காரணமானவனை பத்தி எழுதாம இருக்க முடியுமா ! பொறக்கும் போதே மக்களுக்கு இவ்வளவு நல்ல சேவை செஞ்சி இருக்கறவனை பத்தி எழுதாம இருந்தா பதிவுலகம் என்னையை மன்னிக்காது.

கர்ப்பமா இருக்கும்போது அவங்கம்மா கண்ட கண்ட ப்ளாக்ல யோகா சம்பந்தமா படிச்சி இருப்பாங்க போல இல்லாட்டி முந்தைய ஜென்மத்துல ராம்தேவ் கிட்ட யோகா கத்துக்கிட்டு இருக்கான். பொறந்தவுடனயே மூச்சை இழுத்து புடிச்சிகிட்டு விடாம அழிச்சாட்டியம் பண்ணிட்டான். அப்புறம் டாக்டர் கிட்ட அடி வாங்கி மூச்சு விட ஆரம்பிச்சி, அஞ்சி நாள் ஐசீயூல இருந்து எல்லாருக்கும் திகில் கொடுத்துட்டான் ! இப்ப வீட்டுல ராத்திரி எல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு சமத்தா இருக்கான். ஆனா இப்பவும் அப்பாவை வெப்காம்ல பார்க்காம ஏதாவது பிகர் வருதான்னு லேப்டாப்ப பார்த்துக்கிட்டு இருக்கான்! ஒருவேள கிருஷ்ண ஜெயந்தில பொறந்தது காரணமோ என்னவோ !

இவரு எல்லாரையும் பயம்புடுத்தினதுல, எல்லா சாமி பேரும் இவரோட நாமகரனத்துல சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிட்டாரு. திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நீளத்துக்கு. பையன் பொறந்தா பேரு மனைவி சாய்ஸ், பொண்ணு பொறந்தா என்னோட சாய்ஸ்ன்னு ஒரு அக்ரீமென்ட் இருந்தது. சோ, அவளோட சாய்ஸ் தான். பேரு அபயன். பொண்ணு பொறந்திருந்தா இந்த அக்ரீமென்ட்டோட மதிப்பு எப்படி இருந்து இருக்கும்ன்னு எனக்கு திடீர்னு ஞாபகம் வந்ததுனால, நானும் இந்த பேரு சாய்ஸ்ல உள்ள பூந்தேன். என்னோட சாய்ஸ் ஹயக். ஒரு நாலைஞ்சு வயசுல அவனே இந்த ரெண்டுல ஒன்னு செலக்ட் பண்ணிக்கலாம் (எவ்வளவு சுதந்திரம் பாருங்க !)

ஒருவாரம் கழிச்சி முதல் vaccination கொடுக்க போனோம். ஊசி போட்டா ஒரு சின்ன செல்ல சிணுங்கல் தான். (அவங்கம்மா ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிட்டாங்க.) முதல் வாரத்துலயே ஊசிக்கு பழக்கப்பட்டுட்டான் போலன்னு வருத்தம் இருந்தது. பட், குளிக்க வச்ச போது நல்லா சத்தம் போட்டு அழறான். (அப்பா மாதிரி போல ! )