Monday, October 26, 2009

கடைசியில் ஒரு திருப்பம் (சர்வேசன் 500 நச்ன்னு ஒரு கதை 2009 போட்டிக்காக)


ஒரு பத்திரிகைக்கு நாளை மறுநாள் கதை அனுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளேன். ஏனோ எழுதிவைத்த கதைகளை அனுப்ப மனம் இடம்கொடுக்கவில்லை.

- இந்த பத்திரிகை வாசகர்களுக்கு தகுந்த மாதிரியான சிறுகதைகள் அவற்றுள் இல்லை.

- என்னிடம் இருக்கும் கதைகளை இந்த பத்திரிகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை. அதைத்தவிர, இது போட்டிக்கான சிறுகதை. இப்போட்டியின் விதிமுறைப்படி கடைசியில் ஒரு திருப்பம் இருக்கவேண்டும்.

- பலராலும் அறியப்பட்ட நான் போட்டியில் கலந்து கொள்வது குறித்து எனது முதன்மை வாசகியான பத்மா வருத்தம் தெரிவித்தாள்.இதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

- போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டது தான்.

- முடிவும் நான் அறிந்ததே.

- எழுத்தையே தொழிலாக கொண்ட எனக்கு இதுவரை கதைக்கருவுக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. ஆனால் இன்று ஏனோ வறட்சி. கடந்த ஆறு வருடங்களாக எழுதாதது கூட காரணமாக இருக்கலாம்.

- கதை எழுத எப்பொழுது முயன்றாலும் ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்வது எனக்கு வழக்கம்.

இன்றும் நடக்கத் தொடங்கினேன். பழைய கதைகளுக்கு வந்த விமர்சனத்தை அசை போட்ட படியே நடந்தேன். நான் எழுதிய கதைகள் பலதும் வேறு யாரிடமிருந்தாவது எடுத்தாளப்பட்டதே ! ஆதலால் விமர்சனங்கள் என்னை பாதித்ததே இல்லை. அத்திபூத்தாற் நானே சொந்தமாக எழுதும் கதைகளை பிரசுரத்துக்கு அனுப்புவதே இல்லை. எந்த பத்திரிகையும் பதிப்பகமும் அதற்குரிய தகுதியை அடையவில்லை என்பதே எனது வாசகிகளின் கருத்து. நடந்ததில் பத்மாவின் வீட்டருகே வந்துவிட்டேன். ஜன்னல் வழியாக மிதுன் என்னைப் பார்த்து முறைத்தான். சிறு புன்முறுவலோடு அவனைக் கடந்தேன். பத்மாவை மணம் புரிவதற்கு முன்பு அவனுடன் நான் சிறிது காலம் நட்பாக பழகியுள்ளேன். அதன்பிறகு ஏனோ ஒரு இடைவெளி. இன்னும் சிறிது தூரத்தில் ரமேஷ். அவனையும் கடந்தால் சிறிது இடைவெளிவிட்டு முனைவீட்டில் பிரவீன். நடையின் வேகத்தை சற்றே தளர்த்தினேன். நட்பு, காதல் எதுவுமே எனக்கு நிலையானதாக இருந்ததில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் அதற்கான காரணம் என் அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.

ம்ம்ம் நினைவை கலைத்துக் கொண்டே நடந்தேன்.

- சிறுகதை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கான நிகழ்வை அழகாக கூறுவது என்று பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன்.

இன்று ஏனோ ஒரு குறுநாவலுக்கான கருவே மனதில் தோன்றுகிறது. நாளை தொலைபேசியில் கதை அனுப்ப முடியாது என்று தெரிவித்துவிட வேண்டியது தான். அதுதான் நியாயமும் கூட. இல்லையென்றால் திருப்பம் கொடுப்பதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். இல்லாத கதையில் முடிவு எழுதுவதே கடினம். அதிலும் ஒரு திருப்பம் வேறு என்றால் படிப்பவருக்கு எரிச்சலே மேலிடும். எனக்கென்ன காசா பணமா ? நான் கதையை திருப்பிப் படிக்கக் கூட வேண்டியதில்லை. படித்தாலும் சிரிப்பு தான் வரும். பத்திரிகை ஆசிரியர் மற்றும் வாசகனின் தலையெழுத்தை நினைத்து. நொந்தபடியே தெருவின் எல்லைக்கு வந்திருந்தேன்.

இனி திரும்ப வேண்டும். வலது புறத்தில் ஒரு திருப்பம் இருந்தது.

Monday, October 19, 2009

மிருதுளாவின் நாட்குறிப்புக்கள் - சிறுகதை


ரமேஷ் வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 29 வருடம் - 3 மாதம் - 17 நாட்கள் ஆகின்றன. பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட். தனிவாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருபவன். அவனுக்கு திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவனது மனைவியின் சொத்து மதிப்பு இந்த க்ஷணத்தில் மதிப்பிட்டால் 63 கோடிக்கும் மேல். அழகானவள். ரமேஷிடம் ஆத்மார்த்தமான அன்பு கொண்டவள். செஸ் விளையாட்டில் GM பட்டம் பெற தகுதி பெற்றவள். அவளது பெயர் மிருதுளா.

அவனின் வாழ்க்கைக்குறிப்பை மேலும் எப்படி தொடர்வது என்று எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

"தனது கையில் இருந்த பந்தை விட்டெறிந்து 42' இன்ச் Plasma தொலைக்காட்சியை எப்பொழுது உடைக்கிறானோ அதனுடன் நிறுத்திக்கொள்ளேன்" என்று மிருதுளா கூறியதாக ரமேஷ் என்னிடம் சொன்னான். அப்படிச் செய்தால் அவன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தியது எழுதப்படாமலே போய்விடுமே. அதனால்.

ரமேஷ் தனது 23வது வயதில் சுவீடனில் வசித்து வந்தபோது ஒரு ski ரெசார்ட்டில் மிருதுளாவை சந்தித்தான். இருவருக்கும் மலையேற்றம் ஒரு விருப்பமான விளையாட்டு என்பது புரிந்தது. 2001 - 2003 வரை சிலி மற்றும் டான்சானியாவில் உள்ள பல மலைக்குன்றுகளை ஒன்றாக hike செய்தனர். ஆனால் ஏனோ அதன்பிறகு இன்றுவரை வேறு எந்த hiking செய்யவும் இல்லை / அனுபவத்தைப் பற்றி பேசுவதுமில்லை. ஒரேயொருமுறை மிருதுளாவின் தோழி நன்றாக குடித்திருந்த சமயத்தில் அவளிடம் கிளிமஞ்சாரோவை ஏறியவுடன் வெறுமையாக உணர்ந்ததாக ரமேஷ் கூறியுள்ளான். காரணம் தெரியவில்லை. ரமேஷிற்கு.

சுலக்ஷ்னாவை கத்தியால் குத்த என்ன காரணம் இருக்கமுடியும் ? அவளைப் பற்றி ரமேஷிடம் கேட்டால் ஒரே வார்த்தையில் "வெதுவெதுப்பானவள்" என்று கூறுவான். அதன் அர்த்தம் என்னைப்போலவே பலருக்கும் புரியாததால் அவளின் குணங்களை விரிவாக ஆராய வேண்டும். பிறகொரு சமயத்தில்.

மிருதுளா/ரமேஷ் இருவரும் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வந்தனர். பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே. மனஅமைதி தேவைப்பட்டால் தோழன் தோழி மற்றும் நைட் கிளப். உடல் அசதியை போக்க Sauna மற்றும் Massage. மிருதுளாவும் ரமேஷிற்கு massage செய்வது உண்டு. அவளுக்கு Acu-Puncture கூட தெரியும் என்று ரமேஷ் பெருமைபட்டுப்கொள்வான். அந்தரங்கமான எந்த விஷயத்தையும் அவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதில்லை. ஒருசமயம் அவர்களுக்கு ஒரு ஆன்மீக குருவின் அறிமுகம் கிடைத்தது. ஆன்மாவை சொஸ்தப்படுத்த அவரின் வழிமுறைகளை நாடினார்கள். மசாஜ் செய்யப்படும்போது massaeurயின் கைகள் வலிக்குமோ என்று ரமேஷிற்கு தோன்ற ஆரம்பித்தது அவரின் அறிமுகத்துக்கு பிறகு தான். மசாஜ் மற்றும் ஆன்மிகம் - இரண்டையும் விட்டு விலகி வந்தான்.

சுலக்ஷனாவின் மூக்கு மற்றும் புருவம் மிகவும் நேர்த்தியானது.அவள் மிருதுளாவிற்கு வியன்னாவில் அறிமுகமானாள். ஆஸ்திரிய பெண்களும், சிறுவயதில் பார்த்த ஸ்ரீரங்கத்து பெண்களும் ஒரே இனமாக இருக்கவேண்டும் என்று மிருதுளா கூறுவதாக ரமேஷ் என்னிடம் பலமுறை கூறியுள்ளான். அவனுக்கு சுலக்ஷனா செய்யும் Schnitzel மிகவும் பிடிக்கும். அதற்கெனவே அவளிடம் அடிக்கடி செல்வான். மிருதுளாவிற்குப் பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்பு ரமேஷ் ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணிநேரங்கள் பணிபுரிவான். ஹைபர் ஆக்டிவ்வாக இருப்பான். அதற்கென neuro enhancement drug உபயோகித்ததாக கூறுவான். அதனால் எந்த கெடுதலும் இல்லை என்பது அவனுக்கு அப்பொழுதே தெரியும். அடராள் / ப்ரொவிஜில் பயன்படுத்தினான் என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு மில்லிகிராம் என்று என்னிடம் சொன்னதில்லை. எதேச்சையாக ஒருமுறை தொலைக்காட்சி ரிமோட்டை நோண்டியபோது மைஜென்டிவி என்ற ஒரு சேனல் அறிமுகம் ஆனதாம். அதில் வந்த யோகாவால் கவரப்பட்டு தனது காது மற்றும் மூக்கை விரல்களால் சுழட்டி பார்த்தான். முதல் பதினைந்து நிமிடத்திற்கு மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்ததாம். பிறகு தான் நான் முன்பு கூறியதுபோல் பக்கத்தில் இருந்த பந்தை விட்டெறிந்து தொலைக்காட்சியை உடைத்தான். இத்துடன் இந்தக்குறிப்பை முடித்துக் கொள்ளவேண்டியது தான். ஏனென்றால்.

இப்பொழுதும் அவன் ஏன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தினான் என்பதை எழுத முடியவில்லை. கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதைத் தவிர.

ரமேஷ், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், அதற்கான காரணங்களையும் விலாவாரியாக நாட்குறிப்பில் எழுதவேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவான். படிப்பவர்களின் அனுமானத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் கடுமையாக இருந்தான். நானும் அப்படியே எழுதியுள்ளேன்.

மிருதுளா, சுலக்ஷனாவிடம் இருந்த தனது தொடர்பை துண்டிக்கமுடியாமல் ரமேஷின் உதவியை நாடினாள் என்றே சந்தேகிக்கிறேன். வேறு எந்த அனுமானமும் நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதால் இதை எழுதுகிறேன். அதைத்தவிர அவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டம் இல்லை.

இப்படிக்கு இனியாள்.

பின்குறிப்பு - எனக்கு மிருதுளாவை அதிகம் தெரியாததால் மிருதுளாவின் நாட்குறிப்புக்களை எழுதமுடியவில்லை. தெரிந்தவர்கள் எழுதலாம்

முற்றும்).

Friday, October 16, 2009

கிச்சடி - 16 அக்டோபர்

போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே - நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.

இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.

சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
"இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com"
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.

அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். "அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ" - அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.

World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?

WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் "//" சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !

எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.

எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும் :)- எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் "புனிதப்போர்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.

Monday, October 5, 2009

விதி வலியது

1.A - available/single? Not available & not single - Not single / Available என்ற ஆப்ஷன் இல்லாததால் வெளிநடப்பு.

2 B-.Best friend - எனது அனைத்து நண்பர்களும்.

3.C- Cake or Pie- லூசுக் கேள்வி.

4.D - Drink of Choice - ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட். போன கேள்வியோட பாதிப்பு.

5.E- Essential item you Use every day - டூத் பிக்.

6.F-favorate color - ப்ளூ

7.G-gummy bears or worms - or

8.Home Town - திருச்சி

9.I-Indulgence - தூக்கம்.

10.J- january/february - ஐயா ஜாலி ! march, april, may, june, august, september, october, november, december.

11.K-Kids and their Names - பையனின் பெயர் அபயன்-abyan/ஹயக். ஒரே பையன் தான். பிறந்து ஒரு மாதம் ஆகிறது.

12.L-Life is incomplete with out- கல்யாணம்.

13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.

14.N - Number of sibilings - ஒரே ஒரு அக்கா.

15.O-Orange or Apples - ஆரஞ்சு

16.P- Phobias/fears - கேள்விகள், கேள்விகள், கேள்விகள்

17.Q-Quote for today - All generalizations are wrong including this one.

18.R-Reason to Smile - எனது குட்டிப்பையனின் அனைத்துச் செயல்களும்

19.S-Season - முன்பெல்லாம் ஸ்போர்ட்ஸ் சீசன் உண்டு. இப்பொழுது வருடம் முழுதும் களை கட்டுகிறது.


21.U-Unknown fact about me - முந்தைய ஜென்மத்தில் எனது பெயர் pglakti zsditum

22.V-Vegetable you won't Like - பரங்கிக்காய்.

23.W-worst Habit - நெருங்கியவர்களிடம் மட்டும் எளிதில் எரிச்சல் அடைவது.

24.X- Xrays you had - தவறு செய்து விட்டு கண்ணாடியை பார்த்தால் கண் கூசும் என்கிறார்களே. அதுபோன்ற தத்துவார்த்தமான பதில் சொல்லவேண்டுமா ?

25.Y-Your favorate Food - அராபியாட்டா ரசம். நான் கண்டுபிடிச்சதாக்கும்.

26.Z-Zodiac sign - மீனம்

அன்புக்குரியவர்கள் - என் சொல்பேச்சு கேட்கும் அனைவரும்.

ஆசைக்குரியவர் - கேள்வி singular ஆக இருப்பதால் வெளிநடப்பு.

இலவசமாய் கிடைப்பது - சம்பளம்..

ஈதலில் சிறந்தது - ஈஈஈஈ. புன்னகை.

உலகத்தில் பயப்படுவது - இதுக்கு நான் பதில் வேற எழுதனுமா ?

ஊமை கண்ட கனவு -

எப்போதும் உடன் இருப்பது - அஃறினை கேள்விக்கு காரணம் என்ன ?

ஏன் இந்த பதிவு - நாளைய சரித்திரம்.
ராதாகிருஷ்ணன் சினிமா தொடர் அழைப்பை ஏற்று தான் இந்த வலைப்பதிவே தொடங்கினேன். அதுவரை பின்னூட்டம் மட்டுமே எழுதி மகிழ்ச்சியாக இருந்தேன். இப்பொழுது மறுபடியும் அவரின் அழைப்பை ஏற்று. (எனது அம்பதாவது பதிவா வந்து இருக்கணும். கவிதை ஆசையில விட்டுப்போச்சு..)

ஐஸ்வர்யத்தில் சிறந்தது - ஆரஞ்ச் வண்ண பவள மாணிக்க கல்.

ஒரு ரகசியம் -

ஓசையில் பிடித்தது - ரகசியம் கேட்டதா ?

ஔவை மொழி ஒன்று -