Friday, November 27, 2009

பிடிக்காதவர்கள் / மிகவும் பிடிக்காதவர்கள்


நண்பர் பீர் அவர்களின் அழைப்பை ஏற்று பலமுறை எழுதி ஏனோ பதிவிடாமல் இருந்து வந்திருக்கிறேன். இந்தப்பதிவை தொடங்கிய மாதவராஜ் "பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர்" என்று எழுதி இருந்தார். எனக்கு பிடிக்காதவரை எழுதவதில் ஒரு பிரச்னையும்/மனத்தடையும் இல்லை. பல categoryகளில் பிடித்தவர் உடனடியாக மனதிற்கு தோன்றினாலும் பிடிக்காதவர் பிடிபட மறுக்கிறது. Anyways, முயற்சி செய்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பதிவர்

பிடித்தவர் - தண்டோரா. பிரமாதமான எழுத்துநடை. நகைச்சுவையும் சூப்பர். (உன்னைப்போல் ஒருவன் பட விவாதத்தில் தேவையில்லாமல் வெட்டியாக கலந்துக்கொண்டபோது நான் கண்டெடுத்த பதிவர் !)

பிடிக்காதவர் - எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் :)-

கவிஞர்

பிடித்தவர் - நான் கவிதைகளை பதிவுகளில் மட்டுமே படித்துள்ளேன். அவற்றுள் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதைகள் பிடிக்கும். (most of them)

பிடிக்காதவர் - முதல் ஒன்றிரண்டு வரிகளில் கவிதை புரிய கடினமாக இருந்தால் படிப்பதில்லை. ஆதலால் பிடிக்காத கவிதைகள்/கவிஞர்கள் என்று எதுவும்/யாரும் இல்லை.

எழுத்தாளர்

பிடித்தவர் - தி ஜானகிராமன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ஆதவன் தீட்சண்யா, சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர்

பிடிக்காதவர் - விமலா ரமணி, பாலகுமாரன், ராஜேந்திரகுமார்

விளையாட்டு வீரர்/வீராங்கனை

பிடித்தவர் - ஜன்ஷேர் கான் , கேரி கஸ்பரோவ், ஸ்டீபான் எட்பர்க், வீனஸ் வில்லியம்ஸ், மரடோனா, அஷ்ராவின், அசாருதீன், லாரா, வாசிம் அக்ரம், டைகர் வுட்ஸ் (விளையாட்டுக்கு மட்டும் நாடு / மாநிலம் ரூல்ஸ் ஒதுக்கப்படுகிறது)

பிடிக்காதவர் - நண்பர் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த் பெயரை எழுதி இருந்தார். அதுக்கு காரணமாக அவர் ஸ்பெயினில் வசிப்பதை சொல்லி இருந்தார். அவரை பின்னூட்டத்தில் பிடிக்காததற்கு "இது எல்லாம் ஒரு காரணமா" என்று கேட்டு இருந்தேன். அதற்கு அவர் பிடிக்காத விளையாட்டு வீரர் எழுதுவது சுலபமில்லை. யோசித்துப் பாருங்கள் என்று கூறி இருந்தார். அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சச்சின் பேட்டிங் செய்யும்போது வாசிம் அக்ரம் பந்துபோட வந்தால் "டேய், அவன் காலை உடைங்கடா" என்று கத்தினாலும் மனதின் ஒரு மூலையிலாவது அவரது பந்துவீச்சை ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை.

நடிகர் / நடிகை

பிடித்தவர் - கமல், சிம்ரன், சிவாஜி

பிடிக்காதவர் - நமீதா !

இசை அமைப்பாளர்

பிடித்தவர் - முன்பு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். இப்போழுதென்னவோ சற்றுப் பழையப் பாடல்கள் பிடிக்கின்றன.

இதைத்தொடர புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை அழைக்கிறேன் :)-

Monday, November 23, 2009

திருடுதல்


சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.
என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?

கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?

ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?

நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.

மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?

சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?

எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?

இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?

இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?

இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?

அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?

நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?

கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?

எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் - நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?

அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?

அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.

ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.

ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.

Wednesday, November 18, 2009

கிச்சடி - 19/11/09

ஐரோப்பா பிரெசிடென்சி ரேஸ்ல டோனி ப்ளேர் காலி. ரைட் டு சென்டர் தலைவர் தான் யாராவது வருவாங்க. யாருன்னு பார்க்கலாம்.

நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுல பிரான்ஸ் ஜெயிச்சாங்க. பட், ஹென்றி கையால பந்தை தள்ளிவிட்டு அதுல gallas கோல் அடிச்சார். அதை காரணமா வச்சி ரீமேட்ச் வைக்கச்சொல்லி ireland football association கேட்டு இருக்காங்க. EU Brussels summit ல ireland பிரதமமந்திரி பிரெஞ்சு ப்ரெசிடென்ட் கிட்ட பேசப்போறாராம். Even if FIFA agrees, it can't be a good justice to ireland as french would defintiely start as favourites again. These sort of injustice in sporting contests should remain as it is.

உலகம் முழுக்க irish pub ரொம்ப பிரபலமா இருக்கு. என்ன காரணம் ?

ஆதவன் படம் யாராவது முழுசா பார்த்தீங்களா ? குருவி வில்லு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல.

நண்பர் பீர் பிடித்தவர் / பிடிக்காதவர் தொடர் எழுதச்சொல்லி கூப்பிட்டார். ரெண்டு மூணு முறை எழுதிட்டேன். ஆனா சுவாரசியமாவே இல்லை. யாரெல்லாம் என்னோட பிடித்தவங்க லிஸ்ட்ல வரணும், யாரெல்லாம் வரக்கூடாதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. வாழ்க்கையிலே நாமே எதைத்தான் முடிவு பண்ணி இருக்கோம் ? இதை மட்டும் முடிவு பண்ண ?

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வரும் ஒரு ஜட்ஜ் சுபா. அவங்க பிரமாதமா contestant கூட empathize பண்றாங்க. ரொம்ப நல்ல குவாலிட்டி.

தமிழ்ல virtual keyboard பார்த்துக்கிட்டே டைப் பண்ணுவது மாதிரி ஏதாவது மென்பொருள் இருக்கா ? Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல.

வயித்து வலி ரொம்ப அதிகமானா கத்தியால வயத்தை கிழிச்சா வலி நிக்குமா ?

ஒரு அருமையான சமூகப்புரட்சி சிறுகதையை மீள்பதிவா போட்டா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடலை. ஏன் இப்படி ?

கீழே நவம்பர் 24,2007 ல கவுஹாத்தில ஆதிவாசிகள் தங்களுக்கு ST அந்தஸ்து தரச்சொல்லி நடத்திய போராட்டதின் போது நடந்த வன்முறை வீடியோ. அடுத்தவாரம் ஊடகத்துல இந்த சம்பவம் குறித்தான நினைவூட்டல்கள் இருக்குமா ? இல்லாட்டி அன்றுடன் சச்சின் கிரிக்கெட் விளையாட வந்து 20 வருஷம் 9 நாள் ஆனது குறித்து ஏதாவது கலந்துரையாடல் இருக்குமா ?


வீடியோவில் வந்த பெண்ணின் பெயர் லக்ஷ்மி ஓராங் சுஷந்தா தாலுக்தார் . அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்றார். அவரால் ஏன் வெற்றிப்பெற முடியவில்லை ?

Friday, November 6, 2009

சிறுகதை - கல்யாணம்

டேய், உனக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியல. நீ அடிச்சி இருக்கற கூத்துக்கும், உன்னோட ரசனைக்கும் ஒரு கிராமத்து பொண்ணு கேக்குதாடா ? குடும்ப சகிதமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்த செம்பருத்தியை பெண் பார்க்க சென்று கொண்டு இருந்த ரவியை நோக்கி கேள்விகனையை வீசினான் மூர்த்தி.

கொஞ்சம் அடக்கி வாசிடா! கிராமத்துல யாராவது கேட்டுட்டு தப்பா நினைச்சிக்க போறாங்க என்று நண்பனை அடக்கியவாரே நடந்தான் தாயின் விருப்பத்திற்காக கல்யாணத்தில் நாட்டம் கொண்ட ரவி. பெண் வீட்டில் ஒரு படையே கூடி இருந்தனர். பெண்ணின் தந்தை பிள்ளை வீட்டினரை வரவேற்று உட்கார வைத்தார். வழக்கம் போல், போண்டா மற்றும் காபி கொண்டு வந்தாள் செம்பருத்தி.

பெரியவர்கள் செம்பருத்தியையும் ரவியையும் தனியே பேசுமாறு விளித்தனர். பம்பரம் போன்று சுழன்று செம்பருத்தியின் கூட பிறந்தவர்கள் அனைவரையும் கவனித்தனர். தோட்டத்தில் செம்பருத்தி ரவியிடம் அவளது காதலனை பற்றியும், குடும்பப்பகை பற்றியும் கூறி, தன்னை தயவு செய்து நிராகரிக்குமாறு கெஞ்சினாள். திரும்பி வந்த ரவி தனது பிடித்தத்தை தெரிவிக்க பெண் வீட்டினர் திடுக்கிட்டனர். பெண்ணின் பாட்டி தனது மகனிடம் சென்று "இது எல்லாம் இப்போ சகஜமா நடக்கிறது தான். உன்னோட பசங்க, பையன் முன்னாடி வந்து நிக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது. சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணிடு " என்று கூற ரவியின் திருமணம் செம்பருத்தியின் தம்பி சங்கருடன் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் இனிதே நடந்தேறியது !

( எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை )

Thursday, November 5, 2009

சச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்

ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா தோற்ற மேட்ச் எண்ணிக்கை - 11 + 1. இதை வைத்து சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற கண்ணோட்டத்தில்

http://blog.mohandoss.com/2009/05/3.html

கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

என்னிடம் நேரம் மிகுதியாக இருப்பதால், (பெயர் தேட/வைக்க எந்த நாயும் வளர்க்காததால்) இந்தியா தோற்ற அந்த 11 + 1 மேட்ச்கள் குறித்த கீழ்வரும் ஆராய்ச்சி.

0) சச்சின் - 175. அடுத்தபட்சம் அதிகமாக ரன் எடுத்தது சுரேஷ் ராயினா. அவர் எடுத்த ஓட்டங்கள் - 59. சச்சின் ஆட்டம் இழந்தபோது இந்தியா 17 பந்துகளில் 19 ரன் எடுக்கவேண்டிய நிலை. அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இந்தியாவின் இலக்கு 351. இந்தியா 49.4 ஓவர்களில் 347 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

1) சச்சின் - 146. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் ஜாகீர் கான். அவர் எடுத்த ரன் எண்ணிக்கை 32. இந்திய அணி முதலில் பேட் செய்து 283 ரன்கள். சேஸ் செய்த ஜிம்பாபவ் கடைசி பந்தில், கடைசி விக்கட் மூலம் வெற்றி பெற்றது.

2) சச்சின் - 143. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் லக்ஸ்மன். அவர் எடுத்த ரன்கள் 35. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 284 ரன்களை சேஸ் செய்த பொழுது 250 ரன்களை மட்டுமே பெற்று தோற்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த மேட்சின் முக்கிய நோக்கம் பைனலுக்கு தகுதி பெறுவதே. அந்த இலக்கை அடைந்த பிறகே சச்சின் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் தெரிந்த யாரும் மறக்கமுடியாத சதம். இதன் பிறகு நடந்த பைனலில் சச்சின் மறுபடியும் சதம் அடித்து இந்தியா வென்றது.

3) சச்சின் - 141 not out. அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பெற்றவர் இர்பான் பதான். 64. இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 309. இதன்பின் விளையாடிய மேற்கு இந்திய அணி 141 ரன்களே எடுத்தபொழுது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. DL method மூலம் WI வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

4) சச்சின் - 141. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். இந்திய அணி 329 ஓட்டங்களை சேஸ் செய்தது. 38 ஓவர்களில் இந்தியா 245 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சச்சின் நான்காவதாக ஆட்டம் இழந்தார். இந்தியா 48 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்த டிராவிட் 36 ரன்களை எடுத்தார் !

5) சச்சின் - 137. முதலில் பேட் செய்த இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 271. சச்சினுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை எடுத்த அசார் 72 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இலங்கை 49 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இது இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி. மனோஜ் பிரபாகர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து off spin பவுலிங் போட்ட பந்தயம். ஜெயசூர்யா அருமையாக விளையாடிய ஆட்டம். சச்சின் தனது பத்து ஓவர்களில் நாற்பது ரன்கள் கொடுத்தார்.

6) சச்சின் - 123. முதலில் பேட் செய்த இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 315. அடுத்ததாக டோனி 47 ரன்கள் எடுத்தது குறிப்படத்தக்கது. சேஸ் செய்த பாகிஸ்தான் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

7) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்தியா எடுத்த மொத்த எண்ணிக்கை 226. சச்சின் சற்று மெதுவாகவே விளையாடி இருக்கிறார். அவரது strike rate 80. அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் குவித்த அசார் ஸ்டிரைக் ரேட் 59. அவர் எடுத்த ரன்கள் 58. இலங்கை 45 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றி பெற்றது.

8) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்திய அணி எடுத்த எண்ணிக்கை 224. இலங்கை 44 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்களை எடுத்தது RR singh. அவர் எடுத்த எண்ணிக்கை வெறும் 35 ரன்கள்.

9) சச்சின் - 101. சவுரவ் - 127. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 279. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2001ல் நடைபெற்றது. இந்த ரன்கள் போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் SA 49 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

10) சச்சின் - 100. இர்பான் பதான் - 65. டோனி - 68. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 328. சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்கு தெரியாத நிலையில் அடிக்கப்பட்ட சதம்.

11) சச்சின் - 100. இந்திய அணி - 226. அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த பெருமை manjrekar. 41 ரன்கள். சேஸ் செய்த பாகிஸ்தான் 190 ரன்களை எடுத்து DL method மூலம் வெற்றி பெற்றது.

சச்சின் சதம் அடித்து தோற்ற 11 + 1 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில்.

மிஞ்சி இருக்கும் இரண்டு + ஒன்று போட்டிகள் குறித்து 2) 0) மற்றும் 4) பார்க்கவும்.

Wednesday, November 4, 2009

கிச்சடி - 04/11/09

உளறல்கள் பேத்தல் பிதற்றல்கள் blabberings - பதிவுகளின் தலைப்புக்களில் காணக்கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள். ஏன் படிக்கறவங்களுக்கு இது கூடவா தானா புரியாது ?

சில நாட்களாக ட்விட்டரில் எனது பிதற்றல்களை எழுதி வருகிறேன். ஒருவிதத்தில் ப்ளாக் அடிக்ஷனில் இருந்து வெளிவர உதவுகிறது. ட்விட்டர் அலுவுலகத்தில் block செய்யப்பட்டுள்ளதால் புதிதாக போதை ஏற வாய்ப்பு இல்லை.

வலையில் சும்மா மேய்ந்தபொழுது "மூணார்" என்ற ஒரு படம் பார்த்தேன். (முதல் பத்து நிமிடங்கள் மட்டும்). படத்திற்கு இசை வேதம்புதிது "தேவேந்திரன்". இவ்வளவு வருடங்கள் எங்கு சென்றிருந்தார் ?

புதிதாக எனது பதிவில் Live Traffic Feed பார்க்க ஒரு விட்ஜெட் வைத்துள்ளேன். தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காட்ட மறுக்கிறது. ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா ?

ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன. சரியென்று வீட்டில் கிடந்த வேறொரு புத்தகத்தை படித்ததில் கிடைத்த ஒரு பொன்மொழி.

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர் தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

( உங்கள் இல்லத்துக்கு தேவையான 1008 வீட்டுக்குப் குறிப்புகள் - திருமதி M. சாந்தி அன்னம் பி. ஏ. லிட். இது குறிப்பு எண் 648.)

பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு தொடர்பதிவிலும் எனக்கு அழைப்பு இல்லாததால் donald barthelme எழுதிய பலூன் என்ற ஒரு சிறுகதையை மொழிப்பெயர்க்க முயன்று வருகிறேன். இதுவரை திருப்தி இல்லை. பார்க்கலாம்.

முதல்முறையாக இம்மாதத்தில் ஒரு இலக்கிய இதழ் படித்தேன். அகநாழிகை வாசுதேவனுக்கு நன்றி. முதலில் இருந்த பாவண்ணன் சிறுகதை எளிதான மொழியில் இருந்ததால் "இலக்கிய இதழ்" தானா என்ற சந்தேகம் வரவே செய்தது. பூனைக்குட்டி ஆக்கிரமித்து இருந்ததால் சந்தேகம் நிவர்த்தியானது. கவிதைகளை படிக்கவில்லை.

வாழ்க்கையில் முதல்முறையாக தனியாக இருக்கும்பொழுது தனிமையை உணருகிறேன். மாற்றம் அவசியமாகிறது.

கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊருக்கு போக மாட்டேன்

இதை வெண்பாவாக மாற்றுவது சாத்தியமா ?

ஈசியா கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ தெரியல, இப்ப இதுவும் எழுத வரமாட்டேங்குது. எழுதற மொழியும் திருப்பிப் படிச்சா எரிச்சலா இருக்கு.

நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?

writerpaiyon என்பவரின் ட்விட் கலக்கலாக இருக்கிறது. சாட்டில் ஒரு நண்பர் அதுவேறு யாருமல்ல "நானே" என்று கூறினார். அந்த நண்பரின் பெயரை சொல்வது நாகரீகமாக இருக்குமா ?

ஒருமுறை மக்கள் டிவி பார்த்தபொழுது "நாகரீகம்" என்பதற்கு சரியான தமிழ் சொல் "சால்பு" என்று கூறினர். சரியா ?