Tuesday, December 22, 2009
கிச்சடி - 22/12/09
Monday, November 23, 2009
திருடுதல்

Wednesday, November 18, 2009
கிச்சடி - 19/11/09
Wednesday, November 4, 2009
கிச்சடி - 04/11/09
Friday, October 16, 2009
கிச்சடி - 16 அக்டோபர்
போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே - நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.
இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.
சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
"இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com"
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.
அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். "அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ" - அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.
World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?
WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் "//" சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !
எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.
எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும் :)- எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.
மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் "புனிதப்போர்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.
Tuesday, September 15, 2009
கிச்சடி - 15/09/09
Tuesday, July 14, 2009
கிச்சடி - 14/07/2009
ஆம்ஸ்டர்டாம்மில் உள்ள சிகப்பு விளக்கு தெருக்கள் சுவாரசியமானவை. மிகப் பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன். இவற்றை கண்டுகளிக்க பல Guided tours இருக்கின்றன. இவை ஆரம்பிக்கும் இடம் சர்ச்சுக்கு நேரெதிரில் உள்ள PIC (Prostitution Information Centre). அங்கு விபச்சாரியாக இருந்த / இருக்கும் ஒரு பெண் நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.
விலைமாதுகளுக்கு அரசின் மூலம் அனைத்து மருத்துவ வசதிவாய்ப்புக்களும் உள்ளன. இருந்தபோதிலும் எந்த பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது.
இங்கு நடைபெறுவது விண்டோ ப்ராஸ்டிடியூஷன் என்ற வகையறையை சேர்ந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிகப்பு விளக்கு உண்டு. விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் வீடுகளை தொந்தரவு செய்வது தவறு. மற்ற வீடுகளில் கண்ணாடி கதவிற்கு அருகே நின்று உங்களை அழைப்பார்கள். யாரையும் அழைக்கவும் / நிராகரிக்கவும் செய்வது அவர்களின் உரிமையே.
சில தெருக்கள் மிகவும் குறுகலானது. மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே நடக்கும் அளவிற்கு நெருக்கமானது. சில தெருக்கள் அகலமாகவும் இருக்கும். குறுகலாக இருக்கும் தெருக்களில் வீடுகளின் வாடகை அதிகம். அகலத் தெருக்களில் சிறிது குறைவு. (ஏனென்று கடைசியில்)
தொழில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை. ஏனென்று யூகிப்பது எளிதே.
இத்தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் விபச்சாரம் நடைபெறுவது இல்லை. சராசரி மக்களும் வசித்து வருகின்றனர். சராசரி மக்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் போது குழந்தைகளை விட்டுச்செல்ல குழந்தை காப்பகங்கள் தேவைப்படும். குழந்தைகள் படிக்க மற்றும் விளையாட கிண்டர் கார்டன்கள் தேவைப்படும். அவைகளும் இத்தெருக்களில் அடக்கம்.
தொழில்முறையாக, பெண் விபச்சாரிகள் மட்டுமே உள்ளனர். ஆண்கள் இதுவரை இல்லை.
Trafficking மூலமாக அனுப்பப்பட்ட மொரோக்கோ நாட்டு பெண்கள் விபச்சாரிகளாக கட்டாயமாக மாற்றப்பட்டு தொழில் புரிகின்றனர். அதைத் தவிர பப்பி நாய்க்குட்டி வாங்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரம் செய்ய வந்த பெண்களும் உள்ளனர்.
இங்கு காபி பார்களும் மிகவும் பிரபலம். இவற்றில் ஹாசிஷ் போன்ற ஸாப்ட் போதைப்பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன. இதற்காகவே பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆம்ஸ்டர்டாமை மொய்க்கின்றனர். பாபா காபி பார் ஒரு பிரபலமான மீட்டிங் பாயிண்ட்.
(தனது மனைவியையோ, பெண் தோழியையோ ஏமாற்றி வரும் ஆண்கள் குறுகலான தெருக்களையே தேர்ந்தெடுப்பதால், அங்குள்ள வீடுகளின் வாடகை அதிகம்)
*********************************************
இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது. முரளிதரன், வாஸ், மலிங்கா இல்லாத புதுவித இலங்கை பவுலிங் அட்டாக். விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டை
இலங்கை கடைசியில் எளிதாக கைப்பற்றியது. You strategize for every session and if you win enough number of sessions, you win the test.(Latest Coaching Philosophy) கடைசி செஷனை தவிர பாகிஸ்தான் அனைத்தையும் டாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்க்சில் தொன்னூறே ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதைப் போன்ற பல டெஸ்ட் மேட்ச்களில் இலங்கை தோற்றுள்ளது. ஒருமுறை ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் முதல் இன்னிங்க்ஸ் லீடுடன் தோற்றார்கள் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
*********************************************
திடீரென்று உங்களிடம் யாராவது கத்தி பேசினால் ஒரு படபடப்பு ஏற்படுமே, அதே போன்ற ஓர் உணர்வு எனக்கு கவிதைகளின் முதல் வரியை படிக்கும் போதே ஏற்படுகிறது. (கவிதையுணர்வு!) மூன்று வரிகளுக்கு மேல் படிக்கமுடிவதில்லை. படித்தால் புரியாது என்ற எண்ணமே மேலோங்குகிறது. உண்மையும் கூட. சிறுபத்திரிகைகள் மூலம் பிரபலமான கவிஞர் அனுஜன்யாவின் அறிவுரைப்படி கவிதை எழுதி பழக முயற்சி செய்தேன். பல மாதங்கள் கடந்தும் ஓரெழுத்து கவிதை "அ", இரண்டெழுத்து கவிதை "அ ஆ" போன்றவைகளே மனதில் வருகிறது. சரி, இது சரிப்பட்டு வராது என்று வேறொரு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். குட்டீஸ் விரும்பும் பாப்பா பாடல்களை படிக்க ஆரம்பித்துள்ளேன். அனைத்தும் அருமை. ஒருசில வருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து கவிதைகள் புரிந்தாலும்
புரியலாம். பிடித்தாலும் பிடிக்கலாம்.
Friday, June 26, 2009
கிச்சடி - சிதைவுகள்
Friday, June 12, 2009
கிச்சடி - 12/06/09
ஏதாவது ஒரு வலையுலக பிரபலத்துக்கிட்ட சேட்டில் விடாம உங்களை தொடர்பதிவுக்கு கூப்பிட சொல்லி புடுங்குங்க. அவங்க கூப்பிட்ட பிறகு "பிஸி" ன்னு சொல்லி எழுதாதீங்க. இப்படி பண்ணினா, நீங்க உங்களை கூப்பிட்டவரை விட சீக்கிரமா பிரபலம் ஆகிடலாம். அட்லீஸ்ட் மனசை தேத்திக்கலாம்.
எந்தவொரு பழக்கமும் என்னைய ரொம்ப எளிதா அடிச்ஷனுக்கு கொண்டு தள்ளும். அதுனாலயே நான் முன்னாடி எழுதிக்கிட்டு இருந்த பல பதிவுகளை திடீர்ன்னு ஒரு நாள் டெலீட் பண்ணிடுவேன். ஆனா, இந்த முறை ஆறு மாதம் ஆகியும் வச்சிருக்கேன். கடந்த ஒரு மாசமா ரொம்ப இன்டர்நெட் பக்கம் வராம இருந்தேன். நல்லாவே இருக்கு.
ஒருவாரம் ஊருக்கு வந்து இருந்தேன். பல ரசிக/ரசிகைகள் போன் பண்ண சொல்லி இருந்தும் யார்க்கிட்டேயும் பேச முடியலை. எல்லார்கிட்டையும் பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கறேன்.
திருச்சி ரம்பா திரையரங்குல "அயன்" படம் பார்த்தேன். ஓரளவுக்கு தியேட்டரை சீரமைச்சு இருக்காங்க. போனமுறை மகாமோசமா இருந்தது. இதுக்குமேல படத்தை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல.
எங்க ஊருல ஜீயர் யார்க்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயோ போயிட்டாரு. (டெல்லின்னு சொல்றாங்க.) ஒரே தர்ணா, களேபரம். போலீஸ்ல வேலை செய்யற நண்பர் ஒருவர் பயங்கர கடுப்புல இருக்காரு. தொண்ணூறு வயசுக்கு மேல இவர் ஏன் எங்களை இப்படி பாடாய் படுத்தராறேன்னு.
தமிழ்நாட்டுல தாம்பிராஸ்ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க இந்த முறை தேர்தல்ல (மதுரையில்) அழகிரிக்கு வாக்களிக்க சொல்லி பிரச்சாரம் பண்ணினாங்களாம். என்ன காரணமா இருக்கும் ?
ஊருல அதிமுக தோத்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு எல்லாம் அலசி ஆராஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஏகோபித்த கருத்து அம்மா அரசு ஊழியருக்கு பண்ணின துரோகம்தான்னு. என்னத்த சொல்லுறது !
நான் இருந்த ஒருவாரத்துல எந்த தொலைக்காட்சியிலும் ஈழப்பிரச்சனை பத்தி மருந்துக்கு கூட எதுவும் காட்டலை. ப்ளாக்ல மட்டும் தானா ?
மும்பை தாக்குதல்ல என்னோட அக்கா (கசின்) கணவரோட அண்ணன் சுடப்பட்டு இறந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் இருந்து நாலு பேரு இறந்தாங்களாம். இருவர் BSF. ஒருத்தர் போலீஸ். இன்னொருத்தர் பேங்க். (வாய்வழி செய்தி தான். எந்தளவு சரின்னு தெரியாது) தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ?
ரெங்கநாதர் கோவில்ல சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு மட்டும் போயிருந்தேன். ஸ்ரீரங்கத்துல இருக்கறவங்க ரெங்கநாதர் சந்நிதிக்கு ரெண்டுவருஷத்துல ஒருமுறை போவாங்களா ? அதுவே சந்தேகம் தான். ஐய்யங்கார்வாள் புளியோதரை சூப்பரா இருக்கும்ன்னு கேட்டுக்கேட்டு காதே புளிச்சு போச்சு. ரெங்கநாதர் கோவில் புளியோதரை மண்ணு மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி மண்ணும் இருக்கும்.
ஏன் பதிவு போடலைன்னு கேட்டு என்னோட கூகிள் ஐடிக்கு நூறு பேருக்கு மேல மெயில் பண்ணி இருந்தாங்க. இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின பெங்களூர் மற்றும் மும்பை வாசகிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
Monday, May 11, 2009
மனிதவள மேம்பாட்டுத்துறை - கோபிநாத்தின் நீயா நானா !
இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் மனிதவள மேம்பாட்டு துறைக்கு போதிய அளவு மரியாதையோ / அதிகாரமோ கொடுப்பது கிடையாது. சும்மா ஏதோ பேச்சுக்கு போர்டு மீட்டிங் / பாலிசி மீட்டிங் / XXXXX மீட்டிங் எல்லாவற்றிலும் ஒரு HR மேனேஜர் இருப்பார். அவ்வளவு தான். இன்றும் HR ஒரு necessary evil என்கிற கண்ணோட்டம் தான்.
Ethics :-
டெக்னிக்கல் இன்டர்வியூ க்ளியர் பண்ணிட்டு, HR ரவுண்டு வந்தா முதல் கேள்வி "நீ எப்ப ஜாயின் பண்ணுவன்னு தான்" . அடுத்த அஞ்சி நிமிஷத்துல ப்ராஜெக்ட் குறித்து சொல்லி "ஏன் நீங்க அடுத்த வாரமே ஜாயின் பண்ணனும்ன்னு விலாவாரியா விளக்குவாங்க". வேலை பார்த்து வரும் கம்பெனியோட நோடீஸ் பீரியட் பத்தி எல்லாம் கவலையே படமாட்டாங்க.
common sense :
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் காமன்சென்ஸ் கூட ரொம்பவே கம்மி ! சென்னையில 102 டிகிரி வெய்யில் அடிக்கும். எந்தவித client interaction இல்லாம வேலை பார்த்துகிட்டு இருக்கற employees கிட்ட வந்து Tie & shoe எல்லாம் எதிர்பார்ப்பாங்க. கேட்டா கம்பெனி பாலிசி.
ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு மிக பிரபலமான IT service கம்பெனி மூலமாக ஐரோப்பா வந்தார். அவங்க கம்பெனி பாலிசிப்படி பக்கா பார்மல் டிரஸ் போட்டுக்கிட்டு ஆபீஸ் வருவார். (blazer, tie etc). வந்த எடத்துல எல்லாரும் பெர்முடா போட்டுக்கிட்டு டேபிள் மேல காலை வச்சிக்கிட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா அவர் இருந்த மூணு மாசமும் பார்மல் டிரஸ்ல போக சொல்லி இந்தியாவுலேந்து ஒரே டார்ச்சர். கேட்டா கம்பெனி பாலிசி.
நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில் வெளிநாடு செல்லும் அனைவருக்கும் Travel Facilitation program நடக்கும். கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத ஒரு HR வந்து ஏதாவது உளறுவாங்க. அதை கேட்டுக்கிட்டு ஒருசில அம்மாஞ்சிகளும் அமெரிக்கா போகும் விமானத்துக்கு கோட் & சூட் போட்டுக்கிட்டு வருவாங்க. கேட்டா immigration கடக்கும் போது ஒரு நல்ல impression கொடுக்கனும்ன்னு சொல்லி இருப்பாங்க. (பக்கத்துக்கு ஊருக்கு கூட போகாத ஏதாவது ஒரு HR கொண்டு வந்த பாலிசியா இருக்கும்.) இதே தொல்லை விசா இன்டர்வியூவுக்கும் உண்டு.
Integrity :
employee referral program இந்தியாவில் recruitment க்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிகளில் முக்கியமான ஒண்ணு. ஆனா பல சமயம் HR recruiter கிட்டேந்து ரெஸ்பான்ஸ் வராது. HR recruiter வோட ப்ரைமரி முறை கன்சல்டன்ட் கிட்டேந்து ஆள் பிடிக்கறது தான். காரணம் யூகிக்க ரொம்பவே ஈசி.
இவங்க இப்படினா, நம்ப மக்கள் HR கிட்ட எதை கேக்கலாம், எதை கேக்கக்கூடாதுன்னு கூட தெரியாது. கொஞ்சம் கூட professionalism கிடையாது. அடுத்த கம்பனிக்கு ஏன் போறன்னு கேட்டா வரும் ஒரே பதில் "பர்சனல் ரீசன்" இல்லாட்டி ஏதாவது தேவையில்லாத பொய்.
கோபிநாத் நிகழ்ச்சியில் வழக்கம் போல பலர் உணர்ச்சிவசப்பட்டு பேச முயற்சி பண்ணினாங்க. HR கிட்டேந்து fake resume போட்டு வேலைக்கு வராங்கன்னு ஒரு குற்றச்சாட்டு. அதுக்கு பதில் HR லயும் பலர் fake resume போடறாங்கன்னு ! என்ன சொல்றது ! எல்லா எடத்துலயும் ஒரு கேள்விக்கு பதில் எதிர் கேள்வி தான் போல. இந்த கூட்டத்தை வச்சி உருப்படியான விவாதம் நடத்தறது ரொம்பவே கஷ்டம்.
ஒரு HR கல்யாணமான பெண்களை வேலைக்கு / ப்ராஜெக்டுக்கோ சேர்க்கமுடியாதுன்னு நியாயப்படுத்தினார். வேலை பிளான் பண்ண முடியாதாம். ப்ராஜெக்ட் வேலை பாதிக்கப்படுமாம். கம்பெனில அவரோட ரோலே அவருக்கு தெரியல. ஜென்டர் மற்றும் வயது காரணமா discrimination இருக்ககூடாதுங்கற ஒரு Basic அறிவு கூட இல்லை. இவர் எப்படி மேனேஜ்மண்ட கொடுக்கற பிரஷர் ஹேண்டில் பண்ணுவார் ?
Thursday, May 7, 2009
கிச்சடி - சாரு, இசை மற்றும் நான்
சாருநிவேதிதாவின் இசைக் குறித்தான கருத்துக்களை அவரது தளத்தில் தொடர்ந்து படித்து வந்துள்ளேன்/வருகிறேன். அவர் கொடுத்தப் பல சுட்டிகளை கிளிக் செய்து பாடல்களை கேட்டும் உள்ளேன். சிலது எனக்கு பிடித்தும் இருக்கின்றன. ஆனால் அவரது இசைக் குறித்தான எந்த புத்தகமும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஆதலால் அவரது கருத்துக்களை விமர்சனம் செய்யவோ / பாராட்டவோ உரிமை இருக்கிறதா/இல்லையா என்று தெரியவில்லை.
தொண்ணூறுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்த தாயுமானவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். அவனது அண்ணன் மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீராம் அந்தக்காலத்திலே சாருவின் "தல" ரசிகர்கள். அவர்கள் மூலமாக சாரு மற்றும் அவரது எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். பேன்சி பனியன் மற்றும் அவரது வேறு சில சிறுகதைகளை படித்ததாக ஞாபகம். அந்தச்சமயத்தில் கையில் கிடைக்கும் புத்தகங்கள் எதுவென்றாலும் படிப்பேன். பிடித்தது / பிடிக்காதது / இலக்கியம் / குப்பை என்ற எந்தவொரு வேறுபாடுமின்றி. உண்மையை சொல்வதென்றால் அந்த வேறுபாடுகள் எனக்கு பல சமயங்களில் புரிவதில்லை. சுஜாதாவின் எழுத்துக்களை பல்ப் பிக்ஷன் என்ற வகையறையில் படித்து பின்பு அதுவே இலக்கியம் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டு.
இந்த நண்பர் குழுமம் மூலமாக எனக்கு கிடைத்த மற்ற அறிமுகங்கள் ஓஷோவும், உலக திரைப்படங்களும். ஆனால் ஒருசில மாதங்களிலையே தெளிவுப் பெற்று இன்றிருக்கும் மத்திய தர வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டினேன். இவ்வகை வாழ்க்கை தரும் அனுபவங்கள் அலாதியானது. "ஏக்கம்" என்ற சொல்லின் அர்த்தம் வேறு எவ்வித பிரிவிலும் புரிய உழைக்க வேண்டியிருக்கும்.
உழைப்பு என்று எழுதியவுடன் ஒரு நினைவு. இதுவரை எதையும் ஆராய்ந்து எழுதுவதற்காக உழைத்ததில்லை. நேற்று சச்சினின் ஒருநாள் போட்டி செஞ்சுரிகளை ஆராய்ந்தபோது ஒரு மகிழ்ச்சி. அதை எழுதியபோது ஒரு திருப்தி. யாரும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிந்தபோது ஒரு தெளிவு. இவை அனைத்தும் சாரு யுவனுக்கு எழுதிய பதில் மூலமாகவே சாத்தியப்பட்டது.
எனக்கும் இசை பயின்றவர்கள் பாடும் பாடல்களை விட இசை தெரியாதவர்கள் பாடும் பாடல்கள் கேட்க பிடிக்கும். ஒருவித rawness தான் காரணம் என்று நினைக்கிறேன். ஸ்ருதி, ராகம், ஸ்வரம், அபஸ்வரம் என்று குழம்ப வேண்டியதில்லை. இன்று தொலைக்காட்சியில் நடைபெறும் இசை தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்ப / தகுதி சுற்றுக்களில் கேட்கும் பாடல்களே சாட்சி. ஒருசில வரிகளில் கவரும் பல தனித்துவமான குரல்கள். மெதுவாக தேய்ந்து ப்ரொபஷனல் குரலாக மாறுவதை கண்டு வந்துள்ளேன். எனது இசையார்வம் பின்நவீனத்துவரகமா என்றறிய பதினைந்து கட்டளைகளை பலமுறை படித்தும் பயனில்லை. எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும். ஆதலால் பயப்பட அவசியம் இல்லை என்று எனக்கு நானே தேற்றிக்கொண்டேன். அதைத் தவிர எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம் நாதஸ்வரம். நான் ஸ்கூல் / காலேஜ் படித்துக் கொண்டு இருந்த காலக்கட்டம். மாலையில் நண்பர்களுடன் கூடும் இடம் ரயில்வே பிளாட்பாரம் தான். தினமும் வீட்டில் இருந்து சைக்கிள் பிரயாணம். போகும் வழியில் ஷேக் சின்னமௌலானாவின் வீடு. அங்கு அவரது இரு புதல்வர்களும் தினம் தவறாது சாதகம் செய்வார்கள். பல சமயங்களில் அவர்களின் இசையை நின்று கேட்டுவிட்டு மெதுவாக நண்பர்கள் குழாமுடன் இணைந்துள்ளேன். இசை என்னை மிகவும் கவர்ந்த நிமிடங்கள் அவை தான்.
இளையராஜாவை வட இந்திய மக்கள் கேட்பதில்லை. ரகுமானின் தில்லி - 6 பாடல்களை கொண்டாடுகிறார்கள் என்று எழுதி பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதியதால் இந்தக் குளறுபடி என்று ஒரு திருத்தம் செய்துள்ளார். அதே போன்று தான் மொரோக்கோவின் இசை வடிவங்களை பிரான்ஸ் நாட்டில் கேட்பதும். மொரோக்கோ நாட்டை சேர்ந்த வம்சாவழியினர் ஒரு மில்லியனுக்கும் மேல் பிரான்சில் வசிக்கின்றனர்.
எனக்கு ஒரு உணவகம் பிடித்து விட்டால், அங்கேயே அடிக்கடி செல்வேன். அதில் அலுப்பு வந்தால் மட்டுமே மாற்றம் வரும். இதில் பல குறைகள் இருந்தாலும் எனக்கு சரியாகவே வருகிறது. அதே போன்றே இசையும். பல புதிவித இசை வடிவங்கள் கேட்கும் பொழுது பிடிக்கிறது. ஆனால் மற்றவைகளை தேடிச்செல்ல முயற்சி செய்வதில்லை. இதில் உள்ள தேக்கமோ / குறைகளோ பிறர் சொன்னால் தான் புரிகிறது. ஆனால் ஒருசில நிமிடங்கள் கடந்தால் புரிய மறுக்கின்றது. அதற்காக நாட்டார் கலை / செவ்வியல் கலை மற்றும் அதனை சான்ற குளறுபடிகள் என்று எழுத விருப்பமில்லை.
சாருவின் பல கட்டுரைகளில் பிடித்தமானது அவரது உணர்வுப்பூர்வமான எழுத்து மற்றும் மெல்லிய நகைச்சுவை. அதே சமயம் அவரது மையக்கருத்தை புரிய வைக்க / அழுத்தம் கொடுக்க அவர் கொடுக்கும் பல உபரித் தகவல்கள் தவறாக இருப்பதாக தோன்றும். துருக்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஓரான் பாமுக் குறித்த கட்டுரையில் பல தகவல் பிழைகள் இருந்ததாக நினைவு. அதைக்குறித்து ஒரு நண்பருடன் பேசியபொழுது அவரின் கருத்து வியப்பை அளித்தது. சாருவின் கட்டுரைகளில் "இம்பாக்ட்" மட்டுமே பார்க்கவேண்டும் என்றார். சரி என்று விட்டுவிட்டேன்.
தூக்கம் வருகிறது. நான் கடவுள் படப்பாடலை raaga.com ல் போட்டுவிட்டேன். தூங்க வேண்டும்.
எனது எழுத்து நடை கோழிக்கிறுக்கலை போன்று இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறினார். பள்ளியில் லீவ் லெட்டர் எழுதுவது மட்டுமே எனக்கு எழுத தெரிந்த எழுத்து. அதே கவனத்துடன் எழுத முயன்றேன். சரியாக வந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.
Friday, May 1, 2009
கிச்சடி 01 / 05 / 09
சமீபத்தில் ட்விட்டர்ல பார்த்த/கவர்ந்த ஒரு மெசேஜ் :-
நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?
தமிழ்மணம் முகப்பு பகுதில "எங்கே பிராமணன் - நிறைவு பகுதி" எப்போ வரும் ?
ஷெல் நிறுவனம் கடந்த வருடம் 8 பில்லியனுக்கும் மேலாக லாபம் ஈட்டி கார்ப்பரேட் வரலாறு படைத்தது. கடந்த மூன்று மாதங்களாக புதிதாக வேலைக்கு யாரையும் சேர்க்காமல் நிறுத்தி வைத்து இருக்கிறது. என்ன காரணமா இருக்கும் ?
என்னோட கம்பெனில பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து செய்த ஒரு ஆப்படிக்கும் பிளான். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதில் உங்களுக்கு ஏதாவது முக்கிய முரண்பாடு தெரிகிறதா ?

சமீபத்தில் படித்த புத்தகங்கள் :-
1) Murder
2) Fatal Attraction
3) Crime in London
4) Murder
5) The Testament of Adolf Hitler
6) சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
7) எங்கே பிராமணன்.
உண்மையிலே ஒரு பத்து வாக்கியம் கொண்ட கட்டுரையோ / கதையோ கூட எழுத தெரியல. அதனாலே அடிக்கடி கிச்சடி எழுத வேண்டியதா இருக்கு.
சமீப காலமா வலையுலகத்துல politically correct பதிவுகள் மட்டும் தான் எழுத முடியுது. ஏதாவது நக்கலோ / satire எழுதினா யாராவது வந்து ரகளை பண்றாங்க. பதிவுலக தீவிரவாதம்.
பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்துமதம் - பா ஜ க - இந்துத்துவா. உண்மையிலே மேலோட்டமா எழுதறத குறிப்பால உணர்த்துவதாம் இந்த தலைப்பு. இது தெரியாம என்னனவோ நினைச்சிட்டேன்.
இந்திய கிரிக்கெட் போர்டு ஐ.சி.எல்ல விளையாடினவங்க எல்லாம் மறுபடியும் IPL / இந்திய அணிக்கு வருவதற்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க. எங்க ஏரியா பையன் ஒருத்தன் ICL சென்னை அணில விளையாடறான். ICL இந்திய அணிக்கு கூட கேப்டனா இருந்தான். சதீஷ்ன்னு பேரு. மறுபடியும் ஒரு சுத்து வந்தா நல்லா இருக்கும்.
இன்னும் ஒரு வாரத்துக்கு கண்தானம் விட்ஜெட் வச்சி இருக்கலாம்ன்னு இருக்கேன். யாருக்காவது ஆர்வம் இருந்தா அந்த லிங்க் கிளிக் பண்ணி படிச்சு பாருங்க.
Tuesday, April 14, 2009
கிச்சடி - 14/04/2009
நான் ஒரு சிறுகதை எழுதி வச்சி இருக்கேன். ஆனா அதுக்கு முடிவு எழுத தெரியலை. இதுக்கு உதவி செய்ய ஏதாவது புத்தகம் இருக்கா ?
கல்லூரி சிறுகதை போட்டில வெற்றி பெற்ற பாலாஜிக்கு வாழ்த்துக்கள். கார்க்கியின் கதை டாப் 10ல வராதது பயங்கர அதிர்ச்சி தான். எனக்கு அவரோட கதையும் ரொம்பவே பிடிச்சி இருந்தது. Tastes differ !
Augusta National Golf tournament பைனல் ரவுண்ட் பாத்தேன். கார்பரா, கென்னிபெரிய ஷூட் அவுட்ல தோற்கடித்தார். டைகர் வுட் 17/18th ஹோல் ரெண்டுமே bogey. ஆறாவதா வந்தாரு. Is tiger woods capable of choking ?
தமிழ்ல எழுதும்போது எழுத்து பிழைகள் அதிகமா வருது. சரின்னு, மனசுல தோணும் எல்லா கருமாந்திரத்தையும் ஒரு நோட் புக்ல எழுதினேன். ரெண்டு மூணு நாள் கழிச்சி அதே மாதிரி NHM மூலமா வூட்டுல இருக்கும் கணிப்பொறில டைப் பண்ணினேன். இன்னொரு நாளைக்கு Google Transliterate மூலமா முயற்சி பண்ணினேன். கடைசி முறையில் பயங்கர பிரச்சனை. பலவித "ந" , "ன", "ண" ஆப்ஷன் வரும்போது எதை செலக்ட் பண்ணறதுன்னு குழப்பம் வருது. நோட்ல எழுதும் போது நூறுல ஒரு பத்து வார்த்தைகள் தவறா எழுதினா, இதுல முப்பது வார்த்தைக்கும் மேல தகிடுதத்தம் தான். I suppose language skills are more habitual.
கடைசியாக ஒரு சமையல் குறிப்பு.
அராபியாட்டா வேப்பம் பூ ரசம்
தேவையானவை :
அராபியாட்டா சாஸ்
புளி சிறிதளவு
சிகப்பு மிளகாய்
வேப்பம் பூ
துவரம் பருப்பு
இஞ்சி சிறிதளவு
சீரகம், கடுகு, உப்பு, எண்ணை தேவையான அளவு.
செய்முறை :
தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைக்கவும். அதனுடன் அராபியாட்டா சாஸ்(பழங்களுடன்), அரைக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ரசப்பொடியை சேர்த்து அடுப்பில் கொதிக்கவிடவும். (ரசப்பொடியின் வாசனை போகும் வரை)
மற்றொரு அடுப்பில் வாணலியில் எண்ணையை விட்டு கடுகை போடவும். கடுகு தாளித்தவுடன் சீரகம், இஞ்சி, துவரம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை கிள்ளி போடவும். கடைசியில் வேப்பம் பூவையும் சேர்த்து வறுக்கவும். (கருகாமல் பார்த்துக்கொள்ளவும்)
கொதிக்கும் ரசத்துடன் இவற்றை சேர்த்தால் அராபியாட்டா வேப்பம் பூ ரசம் ரெடி.
சற்றே புளிப்புடன் துவர்ப்பு கலந்து சுவையுடன் கூடிய இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Management Lesson : If you can't buy tomato before easter vacation, look up on your refrigerator and think sensible.
Friday, April 3, 2009
கிச்சடி - 03/04/2009
வேறுபட்ட, வித்தியாசமான, குடும்பப்பாங்கான, மசாலாவான, வகையறுக்கப்படாத - இந்த வகையறையில் வரும் எந்த தமிழ் / ஹிந்தி படமா இருந்தாலும் ஒரு நிச்சயமான காட்சி ஒற்றுமை இருக்கு. அதாவது நம்ப ஹீரோ, ஹீரோயின் வூட்டுக்கு முதல் முறையா வராருன்னு வச்சிக்கோங்க. ஹீரோயின் வூட்டுல யாரும் இருக்கமாட்டாங்க. அந்த அம்மா, அப்பதான் குளிச்சுட்டு துண்டு கட்டிக்கிட்டு வெளில வருவாங்க. அவங்களோட துண்டுக்கும், புவியீர்ப்பு சக்திக்கும் ஒரு பைட் நடக்கும். இயக்குனரோட முடிவு நியூட்டனுக்கு ஆதரவாவே இருக்கும்.பாட்டு நல்லா இருக்கே, படம் ஏதோ வித்தியாசமா இருக்குன்னு சொன்னாங்களேன்னு டெல்லி - 6 பாத்தேன். மரண மொக்க.
அடிக்க வராதீங்க. நான் காலா பந்தர்ங்கர ஹிந்தி வார்த்தைய வெண்மேகம்ன்னு புரிஞ்சிக்கற ஆளு. அதுவும் சப்-டைட்டில் இல்லாம வேற பாத்தேன். சோ, நீங்களும் ஒருமுறை பைட் பாக்க ஆசைப்பட்டா, மீ நோ அப்ஜெக்க்ஷன்.
********************************************
அன்புள்ள சுந்தர் மாமாவுக்கு,
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ? ஒரு வாரமா இங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல . அடிக்கடி கடுதாசு போடு. ஆனா போன முறை நீ எழுதினது சரியா புரியல. கடுதாசில கதை எழுதாத. இந்த மாதிரி சிம்பிள்ளா எழுது.
இப்படிக்கு
மணி
********************************************
Golden Handshake
ஸ்வன் கோரன் எரிக்சன் இங்கிலாந்துக்கு கால்பந்து கோச்சா இருந்தாரு. 2006ல அவர அந்த பதவிலேந்து நீக்கினாங்க. அதுக்கு 3-4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. 2007ல மான்செச்டேர் சிடின்னு ஒரு கால்பந்து கிளப்புக்கு கோச்சா இருந்து பின்ன நீக்கப்பட்டாரு. மறுபடியும் 4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. நேத்திக்கு மெக்சிகோ அணி கோச் பதிவிலேந்து நீக்கி இருக்காங்க. இந்தமுறை 7 மில்லியன் போல.
நான் முன்னாடி வேல செஞ்ச கம்பெனி CEO பேரு கார்லி பியோரினா. அவங்கள 2005ல வேலைய விட்டு தூக்கினாங்க. நஷ்ட ஈடா 20 மில்லியனுக்கு மேல கொடுத்தாங்கன்னு செய்தி வந்தது. இவங்க தான் போன வருஷம் தேர்தல் போது ஜான் மக்கைன் டீமுக்கு நிதித்துறை ஆலோசகர். ஜான் மக்கைன்னோட சேர்ந்து Golden Handshake ஸ்கீமுக்கு எதிரா குரல் கொடுத்தாங்க.
நான் கூட பதிவு எழுதறதுலேந்து நீங்கிக்க ரெடி. சாமியோவ் !
*******************************************
சின்ன வயசுல, எதாவது துடுக்குத்தனம் பண்ணினா, அப்பா ஆபிஸ்லேந்து பூத கண்ணாடில பாத்துக்கிட்டு இருக்காருன்னு சொல்லி மிரட்டுவாங்க. கொஞ்சம் வயசு ஆனதுக்கு பிறகு பண்ற தப்பு எல்லாத்தையும் பாக்க சாமி இருக்காருன்னு பயம் காட்டுவாங்க. இப்ப இது எல்லாத்தையும் உண்மை ஆக்கிடுவாங்க போல. கூகிள் ஸ்ட்ரீட் வியூ உபயோகிச்சு பாருங்க.
**********************************************
ப்ளாக்ல யாராவாது குழந்தை போட்டோ போட்டாக்க, நான் அந்த பதிவ நிச்சயமா பாப்பேன். வரும் எல்லா பதிவுக்கும் ஒரு பதில் பின்னூட்ட டெம்ப்ளேட் இருக்கு. "மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.
******************************************
டெம்ப்ளேட் பத்தி வேற எழுதி இருக்கேன். பொதுவாவே, கட்டுமானத்துக்கு கட்டுப்பட்டவன் நான். ஏ ஜோக், நகைச்சுவை துணுக்கு எதுவும் ஸ்டாக் இல்ல. அதுனால
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
உன் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பியோடு தான்.
(எங்கேயோ, எப்பவோ படிச்சது. யாரு எழுதினதுன்னு தெரியாது. இது நல்ல கவிதையா தான் இருக்கணும். எனக்கே ஞாபகம் இருக்கே.)
Thursday, March 26, 2009
கிச்சடி - 26/03/2009
சுயசரிதை
பழைய நினைவுகள் குறித்தான இன்றைய ஞாபகத்த வச்சி எழுதனுமா, இல்லாட்டி குறிப்புக்கள தேடி கண்டுபுடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதனுமா ?
அலுவலகத்துல உங்கள சுத்தி வேலை பாக்கற ஒவ்வொருத்தருக்கா வேலை போச்சுனா உங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?
கேள்விகள் எல்லாத்துக்கும் கேள்விக்குறி அவசியமா.
எங்க வீட்டுலேந்து நூறு மீட்டர் தூரத்துல ஒரு டென்னிஸ் டோர்னமன்ட் நடந்தது. செமிபைனல் பாக்க போயிருந்தேன். நாடல், மொன்பில்ஸ்ன்னு ஒரு பிரெஞ்சு ப்ளேயர தோக்கடிச்சாரு. சரின்னு மேட்ச் முடிஞ்சவுடன கிளம்பினேன். அடுத்த மேட்ச்சும் அதே டிக்கெட்ல பாக்கலாம்ன்னு சொன்னாங்க. நம்ப லியாண்டர் பேஸ் டபுல்ஸ் விளையாட வந்தாரு. எனக்கு பயங்கர ஆச்சரியம். சுத்தமா எதிர்பார்க்கல. என்னால முடிஞ்ச vocal சப்போர்ட் கொடுத்து ஜெயிக்க வச்சேன் ! ஆனாலும் மேட்ச் முடிஞ்சவுடன அவர் கிட்ட போயி ஆட்டோகிராப் வாங்க ஒரே கூச்சம். வாங்கல. ஏன் இப்படி ?
டூ வீலர், பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் எங்கயாவது குத்தினா அத ஆங்கிலத்துல ஆக்சிடென்ட்ன்னு சொல்றோம். அது ஏன் விமானத்துக்கு மட்டும் crashன்னு சொல்லணும் ?
உங்க அலுவலகத்துல எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தா, நீங்க புது வேலை தேடணுமா இல்லாட்டி ப்ளாக் எழுதனுமா ?
பத்து வருஷம் முன்னாடி ஒரு எடத்துல நான் நுகர்ந்த வாசனையை இப்ப நினைச்சாலும் நுகரவும், உணரவும் முடியுது. யாருக்காவது இது மாதிரி அனுபவம் இருக்கா ? இதுக்கு பேரு (term) என்ன ?
பத்தி எழுத்துல எத்தன சதவீத கேள்விகள், எத்தன சதவீத சேதிகள் இருக்கணும் ? பத்தி எழுத்து இலக்கணம் ஸ்கூல் சிலபஸ்ல இருந்ததா ? வெண்பா இலக்கணம் ஏன் ஞாபகம் வந்து தொலையமாட்டேங்குது ? கூகுள்ல தேடி எழுதனுமா இல்லாட்டி ஞாபகம் இல்லன்னு விட்டுடலாமா ?
எழுதினத திருப்பி படிக்கும் போது பார்க்கற தவறுகள திருத்தி மாத்தலாமா ? இல்லாட்டி இது தவறா ?
கடைசியா இந்த கவிதையோட இத முடிச்சுக்கறேன்.
Thursday, March 5, 2009
கிச்சடி - பதிவுகள், பதிவர்கள், பின்னூட்டங்கள், கிசுகிசு
எந்த திரட்டிளையும் சேர முடியாட்டியும் நான் விடாம அந்த கிறுக்கல தொடர்ந்து 21 நாள் எழுதினேன். அதுக்கு அப்புறம் எனக்கே தாங்க முடியாம ஒருநாள் எரிச்சல்ல டெலீட் பண்ணினேன். அந்த 21 நாள்ல என்னோட அந்த பதிவ ( உளரல) படிச்சவங்க எண்ணிக்கை 4500. எந்த திரட்டிளையும் இல்லாம இவ்வளவு ஹிட்ஸ் வந்ததுக்கு ஒரே காரணம் :- பேரு தான் ! பெயரில் என்ன இருக்கிறதுன்னு கேட்பவர்களுக்கு ! (சின்ன வயசுல சக்கரத்தாழ்வார் சன்னதிய என்னோட நண்பன் 21 முறை சுத்துவான். எதுக்குடா 21 முறை சுத்தறன்னு கேட்டா, சுத்தி முடிக்கற போது அவன புடிச்சி இருக்கற சனியன் எல்லாம் ஓடி போயடும்ன்னு சொல்லுவான்.அவன் பத்து ரவுண்ட் முடிக்கறதுக்கு முன்னாடியே நான் மடப்பள்ளிக்கு ஓடிடுவேன்)
மடப்பள்ளி - லட்டு, அதிரசம்,முறுக்கு கிடைக்குமிடம்.
*******************************************
பதிவுலகத்துல உள்ள ரெண்டு தோழர்களோட நட்பு நட்பிலக்கணத்தின் சான்றாக பிற்காலத்தில் புகழப்படும் என்பது உறுதி. ரெண்டு பேருமே சாருவின் சிஷ்யகோடிங்க. ஒருத்தருக்கு எழுதுவதில் வெறுப்பு வந்து வாசிக்க ஆரம்பித்தால் அடுத்தவரும் அதே. ஒருவருக்கு கம்ப்யூட்டர் கிடைக்காமல் போனதால் அடுத்தவர் அவரிடம் இருந்த லேப்டாப்பை குப்பைதொட்டியில் போட்டதாக ஒரு வதந்தி.
**************************************
ஆறு வருஷம் முன்னாடி என்னோட நண்பனின் கல்யாணத்துக்காக சென்னை வந்து இருந்தேன். ஸ்கூல் மக்களை எல்லாம் மறுபடியும் பாக்கறதுக்கு ஒரு சான்ஸ். எல்லார் கிட்டயும் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு சாமின்னு ஒரு நண்பர் என்கிட்ட வந்து "உன்னைய மாதிரியே இன்னொரு பிரம்மகத்தி பெர்முடா போட்டுக்கிட்டு கல்யாணத்துக்கு வந்து இருக்கு பாருன்னு சொன்னாரு". அப்புறம் விசாரிச்சதுல அவரு என்னோட நண்பன் வேல செஞ்ச cricinfo நிறுவனத்தின் பாஸ்ன்னு சொன்னாங்க. சிறிது காலம் முன்பு வரை நான் படித்து வந்த பதிவர் இவரும்,மருத்துவர் ப்ருனோவும் மட்டும் தான். தற்செயலா இவர் எழுதின சிறுகதை ஒண்ண படிச்சேன். நல்லவேளையா இவரு இப்போ சிறுகதை எழுதறது இல்ல !
*************************************
எனக்கு சமீபகாலமா தமிழ்ல பிடிக்காத வார்த்தைனா "யூத்" தான். அத வச்சி ஒரு மூத்தவர் பண்ற அலும்பு இருக்கே ! யப்பா சொல்லி மாளாது.
*************************************
வாமு கோமு எழுதின கள்ளி நாவல் படிச்சு முடிச்சேன். இன்டர்நெட்ல ப்ரீயா குட்டி கதைகள் படிச்சுட்டு மக்கள் ரொம்ப ஓவரா திட்டறாங்க. இத விட மோசமா எல்லாம் நான் பத்திரிகைல எழுதின போது ஒருத்தனும் திரும்பி கூட பாக்கலன்னு சாரு சொல்றது ஒருவகைல உண்மையோன்னு யோசிக்க வச்சது.
***********************************************
ராமு :- எதுக்கு ரவி வர்மா பத்தி பதிவு இருக்கற ஒவ்வொரு எடத்துலயும் போயி மே ஏ வே கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்க ?
சோமு :- ரவி வர்மா ஒரு பிராடு. மக்கள் தேவை இல்லாம தூக்கி வச்சி ஆடறாங்க. வேணும்னா கானாலிசாவ ரிலீஸ் பண்ண சொல்லு. நான் நிறுத்தறேன்.
ராமு :- உனக்கு பிடிக்கலன்னா விட வேண்டியது தான. அவரு தான copy right வச்சி இருக்காரு. அத தவிர, அவரு வேறு எவ்வளவோ சூப்பர் படம் வரைஞ்சி இருக்காரே.
சோமு :- அப்புறம் எதுக்கு அவருக்கு பாராட்டு விழா, டாச்ற்ரோ பட்டம் ? மக்களுக்கு சரியான தகவல் போய் சேரனும். சரியான தகவல் தெரியாம தான் மக்கள் செயல்படறாங்க. பத்திரிகை காரங்க தப்பு தப்பா ரிப்போர்ட் பண்றாங்க. சமீபத்துல கூட இதுக்காக தான் நான் வீட்டுடைமை பத்தி எழுதினேன்.
ராமு :- ஐயய்யோ ! (மராத்தான் தூரத்த 100 மீட்டர் ச்ப்ரின்ட் ஸ்பீட்ல ஓடியபடியே)
[இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை. எந்த வனில்சன விருது நாயகரை பற்றியும் அல்ல. இதே போன்று கற்பனை கதையோடு வரும் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த நிகழ்வும் கற்பனையே !]
*******************************************
நான் பதிவு எழுதாம ஜாலியா இருந்த போது எழுத சொல்லி "சினிமா சினிமா" தொடர் ஓட்டத்துக்கு கூப்பிட்டவங்க திரு ராதாகிருஷ்ணன் மற்றும் தாமிரா. "எழுதிட்டேன்னு" சொல்லியும் ஒரு பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும். இந்த வாரம் குட்ட மேட்டர் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படறதா ஒரு தகவல்.