Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, December 22, 2009

கிச்சடி - 22/12/09

பேட்ரிக் பட்டேர்சன் பந்துல தொடர்ச்சியா மூணு பவுண்டரி அடிச்சுட்டு , நாலாவது பந்தையும் அடிச்சி அவுட் ஆனபோது ஸ்ரீகாந்தை எப்படியெல்லாம் திட்டினேன்னு இன்னும் ஞாபகம் இருக்கு. இப்ப என்னவோ நாலு / ஆறுன்னாலே ஒரே அலர்ஜியா இருக்குங்க. எதை ஞாபகம் வச்சிக்கறது எதை மறக்கறது ?

முதல்முறையா தீபாவளி எங்க வீட்டுல கொண்டாடாம உறவினர் வீட்டுக்கு போனது எந்த வருஷம்ன்னு ஞாபகம் இல்லை. ஆனா வெடி வெடிச்சுட்டு மேட்ச் பார்த்தது நல்லாவே நினைவுல இருக்கு. ஸ்ரீகாந்த் ரப்பர் சோல் உள்ள ஷூ போட்டுக்கிட்டு ஸ்லிப் ஆகி விழுந்து ரன் அவுட் ஆனார்ன்னு ஞாபகம் இருக்கு. அவருக்கு பிறகு வந்தவங்க எப்படி ஒன் டே மேட்ச் விளையாடக்கூடாதுன்னு பாடம் எடுத்தது ஞாபகம் இருக்கு. இம்ரான் கபிலை வெளுத்து வாங்கினது மறக்கலை. அமர்நாத் அவரோட ஸ்பெல்ல கடைசி ஓவர் போட வரும்போது இன்னிக்கு இவனுக்கு லக் இல்லை. ரெண்டு தான். அதுக்கு மேல சான்ஸ் கிடையாதுன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. பக்கத்துல இருந்தவன் திரும்பி பார்த்து முறைச்சது ஞாபகம் இருக்கு. முதல் ஒன்பது ஓவர்ல ஒரு விக்கெட் எடுத்திருந்தாரா இல்லாட்டி விக்கெட் எதுவும் எடுக்கலையான்னு ஞாபகம் இல்லை.

முதல்முறையா BSRB எக்ஸாம் எழுத காவேரி காலேஜ் போன சமயத்துல மனோஜ் பிரபாகரும், மோங்கியாவும் (WI எதிரா) சிறப்பா விளையாடி இந்தியாவை காலி பண்ணினாங்கன்னு ஞாபகம் இருக்கு.

என்னோட கல்யாணத்தன்னிக்கு எந்த கிரிக்கெட் மேட்சும் நடக்கலைன்னு ஞாபகம் இருக்கு :)-

வாசிம் அக்ரமோட முதல் ஸ்பெல்லை சச்சின் டெண்டுல்கர் அடிச்சி ஆடின்னா கடுப்பு கடுப்பா வரும். ரெண்டு /மூணு ஓவர்ல ஸ்பெல் முடிச்சிக்கிட்டு மறுபடியும் (சச்சின் அவுட் ஆனபிறகு) வந்து கழுத்தறுப்பார்ன்னு பயம் தான் காரணம். இப்ப கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது மாதிரி எந்த பவுலர் கிட்ட பயம் ? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.

ஹைஸ்கோருக்கு காரணம் பேட்ஸ்மன் திங்கிங்ல ஏற்பட்ட paradigm shift தான் காரணம்ன்னு புரிஞ்சாலும் ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.

2003 ல ஜெர்மனி வந்து ஒரே மாசம் தான் முடிஞ்சி இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியா டூர் நடந்துக்கிட்டு இருந்தது. ஏதோ ஒரு சேனல் கார்டு வாங்கி போட்டு அடிலைட் டெஸ்ட் மேட்ச் பார்த்தேன். கலக்கல் மேட்ச். அடுத்த மெல்போர்ன் மேட்ச் நண்பர்களோட பார்க்கனும்ன்னு டக்குன்னு ஒரு டிக்கெட் வாங்கி கிறிஸ்துமஸ் போது திருச்சி வந்தேன். இப்ப பையனை பார்க்கனும்ன்னு ஆசை ஆசையா இருந்தாலும் வேலை / விசா காரணங்களால வரமுடியலை. கலியுகத்துல பண்ணின பாவத்துக்கு அந்த ஜென்மத்துலயே பலனை அனுபவிக்கனும் போல !

Serie A லீக் ரொம்ப பார்த்தது கிடையாது. ஆனா ஸ்வீடன் மேட்ச்ல Zlatan Ibramovich விளையாடினதை பலமுறை பார்த்து இருக்கேன். வெறும் ஹைப் தான்ன்னு நண்பர்கள் கிட்ட சொல்லி இருக்கேன். பட், இப்ப Barca மேட்ச் பார்க்கும்போது தான் தெரியுது, ஏன் எல்லாரும் தலைமேல வச்சி கொண்டாடினாங்கன்னு ! Pure Class.

டால்மியா மாதிரி ஒரு ஆளு நம்ப வூரு கால்பந்து நிர்வாகத்துக்கு வந்தா நல்லா இருக்கும். (கமர்ஷியளைஸ் பண்ணிட்டாருன்னு பின்னாடி திட்டிக்கலாம் !) இந்தியாவுல கால்பந்துக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பயங்கர அதிகம். oliver kahn பார்வெல் மேட்ச் பார்க்க கல்கத்தாவுல ஒரு லட்சத்துக்கு அதிகமானவங்க stadium வந்திருந்தாங்க !

ட்விட்டர் கொஞ்சம் ஈசியா இருக்கறதுனால ஒரு மூணு வாரமா ப்ளாக் ரொம்ப படிக்கலை. எந்த வலைப்பக்கத்தை திறந்தாலும் ஒண்ணு சாரு இல்லாட்டி வேட்டைக்காரன். ரெண்டுலயும் சுவாரசியம் போயிடிச்சு. சோ, மறுபடியும் ப்ளாக் எழுதனும்ன்னு வலுக்கட்டாயமா ஆரம்பிச்சா ஸ்போர்ட்ஸ் மேட்டர் தான் மனசுல தோணுது. சோ, ரொம்ப கஷ்டப்பட்டு கீழ்வருபவன.

ஒரு மொழில ஒரே அர்த்தம் கொடுக்கற பல சொற்கள் இருக்கும் காரணம் என்ன ? குருதி, இரத்தம் (ரத்தம்) ஏன் ?

empathy ங்கர ஆங்கில சொல்லை தமிழ்ல நேரடியா மொழிபெயர்க்க முடியுமா ? பல ஆன்லைன் டிக்ஷ்ணரில பச்சாதாபம்ன்னு எழுதி இருக்கு. பட், எனக்கு திருப்தி இல்லை.

ஒரு நம்பிக்கை முட்டாள்த்தனமா இருந்தா மூடநம்பிக்கை ஆகுதா இல்லாட்டி மூடர்களோட நம்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை ஆகுதா ?

எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது, கைரேகை, கிளி ஜோசியம் ஆகியவையில் நம்பிக்கை கிடையாது. நாடி ஜோதிடம் / எனர்ஜி transformation போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கை குறித்து தெரியவில்லை. ஆனால் பிள்ளையார், முருகன் மற்றும் சிங்கபெருமாளிடம் நம்பிக்கை உண்டு. பேய்களில் உள்ள அனைத்து classification மீதும் நம்பிக்கை கிடையாது.

தமிழ்நாட்டில் வசிக்கும் வரை மார்கழி மாதம் என்றால் குளிரும் என்றும் நம்பினேன்.

எனது நம்பிக்கைகளின் அடிப்படையில் என்னை எப்படி வகையறுக்கவேண்டும் ?

Monday, November 23, 2009

திருடுதல்


சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.
என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?

கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?

ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?

நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.

மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?

சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?

எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?

இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?

இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?

இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?

அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?

நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?

கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?

எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் - நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?

அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?

அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.

ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.

ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.

Wednesday, November 18, 2009

கிச்சடி - 19/11/09

ஐரோப்பா பிரெசிடென்சி ரேஸ்ல டோனி ப்ளேர் காலி. ரைட் டு சென்டர் தலைவர் தான் யாராவது வருவாங்க. யாருன்னு பார்க்கலாம்.

நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுல பிரான்ஸ் ஜெயிச்சாங்க. பட், ஹென்றி கையால பந்தை தள்ளிவிட்டு அதுல gallas கோல் அடிச்சார். அதை காரணமா வச்சி ரீமேட்ச் வைக்கச்சொல்லி ireland football association கேட்டு இருக்காங்க. EU Brussels summit ல ireland பிரதமமந்திரி பிரெஞ்சு ப்ரெசிடென்ட் கிட்ட பேசப்போறாராம். Even if FIFA agrees, it can't be a good justice to ireland as french would defintiely start as favourites again. These sort of injustice in sporting contests should remain as it is.

உலகம் முழுக்க irish pub ரொம்ப பிரபலமா இருக்கு. என்ன காரணம் ?

ஆதவன் படம் யாராவது முழுசா பார்த்தீங்களா ? குருவி வில்லு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல.

நண்பர் பீர் பிடித்தவர் / பிடிக்காதவர் தொடர் எழுதச்சொல்லி கூப்பிட்டார். ரெண்டு மூணு முறை எழுதிட்டேன். ஆனா சுவாரசியமாவே இல்லை. யாரெல்லாம் என்னோட பிடித்தவங்க லிஸ்ட்ல வரணும், யாரெல்லாம் வரக்கூடாதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. வாழ்க்கையிலே நாமே எதைத்தான் முடிவு பண்ணி இருக்கோம் ? இதை மட்டும் முடிவு பண்ண ?

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வரும் ஒரு ஜட்ஜ் சுபா. அவங்க பிரமாதமா contestant கூட empathize பண்றாங்க. ரொம்ப நல்ல குவாலிட்டி.

தமிழ்ல virtual keyboard பார்த்துக்கிட்டே டைப் பண்ணுவது மாதிரி ஏதாவது மென்பொருள் இருக்கா ? Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல.

வயித்து வலி ரொம்ப அதிகமானா கத்தியால வயத்தை கிழிச்சா வலி நிக்குமா ?

ஒரு அருமையான சமூகப்புரட்சி சிறுகதையை மீள்பதிவா போட்டா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடலை. ஏன் இப்படி ?

கீழே நவம்பர் 24,2007 ல கவுஹாத்தில ஆதிவாசிகள் தங்களுக்கு ST அந்தஸ்து தரச்சொல்லி நடத்திய போராட்டதின் போது நடந்த வன்முறை வீடியோ. அடுத்தவாரம் ஊடகத்துல இந்த சம்பவம் குறித்தான நினைவூட்டல்கள் இருக்குமா ? இல்லாட்டி அன்றுடன் சச்சின் கிரிக்கெட் விளையாட வந்து 20 வருஷம் 9 நாள் ஆனது குறித்து ஏதாவது கலந்துரையாடல் இருக்குமா ?


வீடியோவில் வந்த பெண்ணின் பெயர் லக்ஷ்மி ஓராங் சுஷந்தா தாலுக்தார் . அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்றார். அவரால் ஏன் வெற்றிப்பெற முடியவில்லை ?

Wednesday, November 4, 2009

கிச்சடி - 04/11/09

உளறல்கள் பேத்தல் பிதற்றல்கள் blabberings - பதிவுகளின் தலைப்புக்களில் காணக்கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள். ஏன் படிக்கறவங்களுக்கு இது கூடவா தானா புரியாது ?

சில நாட்களாக ட்விட்டரில் எனது பிதற்றல்களை எழுதி வருகிறேன். ஒருவிதத்தில் ப்ளாக் அடிக்ஷனில் இருந்து வெளிவர உதவுகிறது. ட்விட்டர் அலுவுலகத்தில் block செய்யப்பட்டுள்ளதால் புதிதாக போதை ஏற வாய்ப்பு இல்லை.

வலையில் சும்மா மேய்ந்தபொழுது "மூணார்" என்ற ஒரு படம் பார்த்தேன். (முதல் பத்து நிமிடங்கள் மட்டும்). படத்திற்கு இசை வேதம்புதிது "தேவேந்திரன்". இவ்வளவு வருடங்கள் எங்கு சென்றிருந்தார் ?

புதிதாக எனது பதிவில் Live Traffic Feed பார்க்க ஒரு விட்ஜெட் வைத்துள்ளேன். தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காட்ட மறுக்கிறது. ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா ?

ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன. சரியென்று வீட்டில் கிடந்த வேறொரு புத்தகத்தை படித்ததில் கிடைத்த ஒரு பொன்மொழி.

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர் தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

( உங்கள் இல்லத்துக்கு தேவையான 1008 வீட்டுக்குப் குறிப்புகள் - திருமதி M. சாந்தி அன்னம் பி. ஏ. லிட். இது குறிப்பு எண் 648.)

பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு தொடர்பதிவிலும் எனக்கு அழைப்பு இல்லாததால் donald barthelme எழுதிய பலூன் என்ற ஒரு சிறுகதையை மொழிப்பெயர்க்க முயன்று வருகிறேன். இதுவரை திருப்தி இல்லை. பார்க்கலாம்.

முதல்முறையாக இம்மாதத்தில் ஒரு இலக்கிய இதழ் படித்தேன். அகநாழிகை வாசுதேவனுக்கு நன்றி. முதலில் இருந்த பாவண்ணன் சிறுகதை எளிதான மொழியில் இருந்ததால் "இலக்கிய இதழ்" தானா என்ற சந்தேகம் வரவே செய்தது. பூனைக்குட்டி ஆக்கிரமித்து இருந்ததால் சந்தேகம் நிவர்த்தியானது. கவிதைகளை படிக்கவில்லை.

வாழ்க்கையில் முதல்முறையாக தனியாக இருக்கும்பொழுது தனிமையை உணருகிறேன். மாற்றம் அவசியமாகிறது.

கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊருக்கு போக மாட்டேன்

இதை வெண்பாவாக மாற்றுவது சாத்தியமா ?

ஈசியா கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ தெரியல, இப்ப இதுவும் எழுத வரமாட்டேங்குது. எழுதற மொழியும் திருப்பிப் படிச்சா எரிச்சலா இருக்கு.

நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?

writerpaiyon என்பவரின் ட்விட் கலக்கலாக இருக்கிறது. சாட்டில் ஒரு நண்பர் அதுவேறு யாருமல்ல "நானே" என்று கூறினார். அந்த நண்பரின் பெயரை சொல்வது நாகரீகமாக இருக்குமா ?

ஒருமுறை மக்கள் டிவி பார்த்தபொழுது "நாகரீகம்" என்பதற்கு சரியான தமிழ் சொல் "சால்பு" என்று கூறினர். சரியா ?

Friday, October 16, 2009

கிச்சடி - 16 அக்டோபர்

போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே - நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.

இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.

சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
"இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com"
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.

அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். "அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ" - அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.

World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?

WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் "//" சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !

எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.

எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும் :)- எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் "புனிதப்போர்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.

Tuesday, September 15, 2009

கிச்சடி - 15/09/09

அடுத்த மதர் சுப்பீரியர் kim clijsters போல.

மகளிர் டென்னிஸ் மிகவும் சுவாரசியமானது. கடந்த நான்கைந்து வருடங்களாக பலரும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர். இதை ஒரு பலவீனமாக சித்தரிக்கின்றனர். சரியா ?

சச்சின் பைனலில் செஞ்சுரி அடித்ததால் compaq கப்புக்கு மற்றுமொரு ஒரு பைனல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

WWF ரூல்ஸ் புத்தகமாகவோ லிங்காகவோ கிடைக்குமா ?

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலம் பெற்று வரும் வேளையில் வரலாற்றை மாற்றி எழுதும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது உலகப்போருக்கு முதல் காரணமாக சோவியத்தை சித்தரிக்க தொடங்கியுள்ளனர். யூதர்களுக்கு எதிராக எஸ்டோனியா மற்றும் லித்துவானியா போன்ற நாடுகள் செய்த வதைகளை தள்ளுபடி செய்தும் வருகின்றனர்.

ஆதி என்பது தமிழ் சொல் இல்லையாம். ஆதலால் அதை முதலி என்று மாற்றி அகரமுதலி என்று டிக்ஷனரியை எழுத வேண்டுமாம். திருவள்ளுவரை வடமொழி புலவராக மாற்ற ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சியாக இருக்குமோ ?

சச் கா சாம்னா (உண்மைக்கு வெகு அருகில்) என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. 21 கேள்விகளுக்கு உண்மை மற்றும் கூறுபவர்களுக்கு ஒரு கோடி. செம டீல் ! ஒரு சில குளறுபடிகள் இருக்கின்றன. 50 கேள்விகள் கேட்கின்றனர். அவற்றுக்கான பதிலை POLYGRAPH மூலம் சோதிக்கின்றனர். அதே கேள்விகளை நிகழ்ச்சியின் போது மறுபடியும் கேட்கின்றனர். முன்பு எடுத்த POLYGRAPH மூலம் பதிலை உண்மையா / பொய்யா என்று முடிவு எடுக்கின்றனர்.
போட்டியாளர் ஒரு குடிகாரர். கல்யாணத்திற்கு பிறகும் மற்ற பெண்களுடன் தொடர்பு உள்ளவர். அவருக்கு ILLEGITIMATE CHILD இருப்பதும் இப்போட்டியின் முதல் கேள்விகளின் மூலம் அவரின் தந்தைக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு ஒரு கேள்வி : உங்கள் எண்ணப்படி உங்கள் தந்தைக்கு உங்களின் மேல் பெருமை உண்டா ? போட்டியாளரின் பதில் : இல்லை. அதை தவறு என்று POLYGRAPH ரிசல்ட்(முதல் கேள்விகளின் பதில்கள் அவர் தந்தைக்கு தெரியும்முன் எடுக்கப்பட்ட) கூறியதால் அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். உண்மை, பொய் என்ற புள்ளிகள் time என்ற coordinate க்கு கட்டுப்பட்டது.

சமீபத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள அருமையான பூங்கா ஒன்றில் ஆறு வயது தாண்டிய சிறுவர் சிறுமியர் சிலம்பம் பயிற்சி செய்வதை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது.

யு எஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் மகளிர் பட்டதை வீனஸ் மற்றும் செரினா வென்றார்கள். அவர்களின் post match interview :-

TIM CURRY: Thanks for joining us for our press conference with our 2009 US Open women's doubles champions. We ask that any questions in today's press conference refer to events of today only.

With that, we'll open the floor.

Q. Congratulations Venus and Serena on your doubles championship. As it relates to events of today, you issued a statement as it relates to your actions the other night. Why did it take 48 hours for you to release the statement?

Tuesday, July 14, 2009

கிச்சடி - 14/07/2009

ஆம்ஸ்டர்டாம்மில் உள்ள சிகப்பு விளக்கு தெருக்கள் சுவாரசியமானவை. மிகப் பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன். இவற்றை கண்டுகளிக்க பல Guided tours இருக்கின்றன. இவை ஆரம்பிக்கும் இடம் சர்ச்சுக்கு நேரெதிரில் உள்ள PIC (Prostitution Information Centre). அங்கு விபச்சாரியாக இருந்த / இருக்கும் ஒரு பெண் நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

விலைமாதுகளுக்கு அரசின் மூலம் அனைத்து மருத்துவ வசதிவாய்ப்புக்களும் உள்ளன. இருந்தபோதிலும் எந்த பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது.

இங்கு நடைபெறுவது விண்டோ ப்ராஸ்டிடியூஷன் என்ற வகையறையை சேர்ந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிகப்பு விளக்கு உண்டு. விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் வீடுகளை தொந்தரவு செய்வது தவறு. மற்ற வீடுகளில் கண்ணாடி கதவிற்கு அருகே நின்று உங்களை அழைப்பார்கள். யாரையும் அழைக்கவும் / நிராகரிக்கவும் செய்வது அவர்களின் உரிமையே.

சில தெருக்கள் மிகவும் குறுகலானது. மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே நடக்கும் அளவிற்கு நெருக்கமானது. சில தெருக்கள் அகலமாகவும் இருக்கும். குறுகலாக இருக்கும் தெருக்களில் வீடுகளின் வாடகை அதிகம். அகலத் தெருக்களில் சிறிது குறைவு. (ஏனென்று கடைசியில்)

தொழில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை. ஏனென்று யூகிப்பது எளிதே.

இத்தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் விபச்சாரம் நடைபெறுவது இல்லை. சராசரி மக்களும் வசித்து வருகின்றனர். சராசரி மக்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் போது குழந்தைகளை விட்டுச்செல்ல குழந்தை காப்பகங்கள் தேவைப்படும். குழந்தைகள் படிக்க மற்றும் விளையாட கிண்டர் கார்டன்கள் தேவைப்படும். அவைகளும் இத்தெருக்களில் அடக்கம்.

தொழில்முறையாக, பெண் விபச்சாரிகள் மட்டுமே உள்ளனர். ஆண்கள் இதுவரை இல்லை.

Trafficking மூலமாக அனுப்பப்பட்ட மொரோக்கோ நாட்டு பெண்கள் விபச்சாரிகளாக கட்டாயமாக மாற்றப்பட்டு தொழில் புரிகின்றனர். அதைத் தவிர பப்பி நாய்க்குட்டி வாங்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரம் செய்ய வந்த பெண்களும் உள்ளனர்.

இங்கு காபி பார்களும் மிகவும் பிரபலம். இவற்றில் ஹாசிஷ் போன்ற ஸாப்ட் போதைப்பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன. இதற்காகவே பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆம்ஸ்டர்டாமை மொய்க்கின்றனர். பாபா காபி பார் ஒரு பிரபலமான மீட்டிங் பாயிண்ட்.

(தனது மனைவியையோ, பெண் தோழியையோ ஏமாற்றி வரும் ஆண்கள் குறுகலான தெருக்களையே தேர்ந்தெடுப்பதால், அங்குள்ள வீடுகளின் வாடகை அதிகம்)
*********************************************

இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது. முரளிதரன், வாஸ், மலிங்கா இல்லாத புதுவித இலங்கை பவுலிங் அட்டாக். விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டை
இலங்கை கடைசியில் எளிதாக கைப்பற்றியது. You strategize for every session and if you win enough number of sessions, you win the test.(Latest Coaching Philosophy) கடைசி செஷனை தவிர பாகிஸ்தான் அனைத்தையும் டாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்க்சில் தொன்னூறே ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதைப் போன்ற பல டெஸ்ட் மேட்ச்களில் இலங்கை தோற்றுள்ளது. ஒருமுறை ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் முதல் இன்னிங்க்ஸ் லீடுடன் தோற்றார்கள் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
*********************************************

திடீரென்று உங்களிடம் யாராவது கத்தி பேசினால் ஒரு படபடப்பு ஏற்படுமே, அதே போன்ற ஓர் உணர்வு எனக்கு கவிதைகளின் முதல் வரியை படிக்கும் போதே ஏற்படுகிறது. (கவிதையுணர்வு!) மூன்று வரிகளுக்கு மேல் படிக்கமுடிவதில்லை. படித்தால் புரியாது என்ற எண்ணமே மேலோங்குகிறது. உண்மையும் கூட. சிறுபத்திரிகைகள் மூலம் பிரபலமான கவிஞர் அனுஜன்யாவின் அறிவுரைப்படி கவிதை எழுதி பழக முயற்சி செய்தேன். பல மாதங்கள் கடந்தும் ஓரெழுத்து கவிதை "அ", இரண்டெழுத்து கவிதை "அ ஆ" போன்றவைகளே மனதில் வருகிறது. சரி, இது சரிப்பட்டு வராது என்று வேறொரு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். குட்டீஸ் விரும்பும் பாப்பா பாடல்களை படிக்க ஆரம்பித்துள்ளேன். அனைத்தும் அருமை. ஒருசில வருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து கவிதைகள் புரிந்தாலும்
புரியலாம். பிடித்தாலும் பிடிக்கலாம்.

Friday, June 26, 2009

கிச்சடி - சிதைவுகள்

மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.

உரையாடல் சிறுகதை போட்டிக்கு ஒரு பிரபல பதிவரின் பதிவில் எனது சிறுகதையை பிரசுரித்துள்ளேன். பரிசு கிடைக்குமா ?

பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது என்று எழுதினால் நான் இந்துத்துவவாதியா ?

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இந்த குறளை படித்துவிட்டு அடுத்தவரை நாண வைப்பதற்காக நல்லவற்றை செய்ய ஆரம்பித்துள்ளேன். இது சரியா ?

சரி இல்லையென்றால் தவறா ?

தமிழில் ஒரு நல்ல ஆண்பெயர் கூறுங்களேன்.

பெயருக்கு மொழி உண்டா ?

மொழிக்கு பெயர் இருக்கும்போது பெயருக்கு மொழி இருக்கக்கூடாதா ?

வித்தியாசம் என்ற புதரில் என்றாவது அகப்பட்டதுண்டா?

பல்ப் பிக்ஷன் என்ற வகையறுக்கப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே எனக்கு படிக்க பிடிக்கறது. அப்படியென்றால் நான் வெகுஜன எழுத்தாளர்களை ரசிக்கும் இலக்கியவாதியா ?

கோர்வையற்ற எண்ணங்களை எழுத்தாக மாற்றும் இலக்கியவாதிகளிடம் ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம்.

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை பல லட்சங்கள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

நான் லீனியர் முறையில் எழுதப்படும் நாவல்கள், சிறுகதைகள் எப்படி படித்தாலும் புரியாதா ?

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை ஒரு லட்சம் காசுகள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?

முடியுமென்றால் எப்படி ?

பிரபலப்பதிவர் பலரின் பதிவுகளை படித்து அவற்றை பற்றி எழுதியும், அவற்றுக்கு தமிழிஷ்ல் வாக்களித்தும் வருவதற்கு பதிலாக கும்மாங்குத்து பதிவுகள் எழுதுவது மாதிரியாகவா ?

கடைசிப் பத்தியை எழுதாமல் இருந்து இருந்தால் இதை சிறுகதையாக அறிவித்து இருக்கலாமா ?

கதையின் முடிவில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்காவிட்டால் அது சிறுகதை என்ற இலக்கண வகையறையில் வராதா ?

இந்த சிறுகதை "உரையாடல்" அமைப்பின் சார்பாக நடைபெறும் போட்டிக்காக எழுதப்பட்டது.

Friday, June 12, 2009

கிச்சடி - 12/06/09

ஏதாவது ஒரு வலையுலக பிரபலத்துக்கிட்ட சேட்டில் விடாம உங்களை தொடர்பதிவுக்கு கூப்பிட சொல்லி புடுங்குங்க. அவங்க கூப்பிட்ட பிறகு "பிஸி" ன்னு சொல்லி எழுதாதீங்க. இப்படி பண்ணினா, நீங்க உங்களை கூப்பிட்டவரை விட சீக்கிரமா பிரபலம் ஆகிடலாம். அட்லீஸ்ட் மனசை தேத்திக்கலாம்.


எந்தவொரு பழக்கமும் என்னைய ரொம்ப எளிதா அடிச்ஷனுக்கு கொண்டு தள்ளும். அதுனாலயே நான் முன்னாடி எழுதிக்கிட்டு இருந்த பல பதிவுகளை திடீர்ன்னு ஒரு நாள் டெலீட் பண்ணிடுவேன். ஆனா, இந்த முறை ஆறு மாதம் ஆகியும் வச்சிருக்கேன். கடந்த ஒரு மாசமா ரொம்ப இன்டர்நெட் பக்கம் வராம இருந்தேன். நல்லாவே இருக்கு.


ஒருவாரம் ஊருக்கு வந்து இருந்தேன். பல ரசிக/ரசிகைகள் போன் பண்ண சொல்லி இருந்தும் யார்க்கிட்டேயும் பேச முடியலை. எல்லார்கிட்டையும் பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கறேன்.


திருச்சி ரம்பா திரையரங்குல "அயன்" படம் பார்த்தேன். ஓரளவுக்கு தியேட்டரை சீரமைச்சு இருக்காங்க. போனமுறை மகாமோசமா இருந்தது. இதுக்குமேல படத்தை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல.

எங்க ஊருல ஜீயர் யார்க்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயோ போயிட்டாரு. (டெல்லின்னு சொல்றாங்க.) ஒரே தர்ணா, களேபரம். போலீஸ்ல வேலை செய்யற நண்பர் ஒருவர் பயங்கர கடுப்புல இருக்காரு. தொண்ணூறு வயசுக்கு மேல இவர் ஏன் எங்களை இப்படி பாடாய் படுத்தராறேன்னு.

தமிழ்நாட்டுல தாம்பிராஸ்ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க இந்த முறை தேர்தல்ல (மதுரையில்) அழகிரிக்கு வாக்களிக்க சொல்லி பிரச்சாரம் பண்ணினாங்களாம். என்ன காரணமா இருக்கும் ?

ஊருல அதிமுக தோத்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு எல்லாம் அலசி ஆராஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஏகோபித்த கருத்து அம்மா அரசு ஊழியருக்கு பண்ணின துரோகம்தான்னு. என்னத்த சொல்லுறது !

நான் இருந்த ஒருவாரத்துல எந்த தொலைக்காட்சியிலும் ஈழப்பிரச்சனை பத்தி மருந்துக்கு கூட எதுவும் காட்டலை. ப்ளாக்ல மட்டும் தானா ?

மும்பை தாக்குதல்ல என்னோட அக்கா (கசின்) கணவரோட அண்ணன் சுடப்பட்டு இறந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் இருந்து நாலு பேரு இறந்தாங்களாம். இருவர் BSF. ஒருத்தர் போலீஸ். இன்னொருத்தர் பேங்க். (வாய்வழி செய்தி தான். எந்தளவு சரின்னு தெரியாது) தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ?

ரெங்கநாதர் கோவில்ல சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு மட்டும் போயிருந்தேன். ஸ்ரீரங்கத்துல இருக்கறவங்க ரெங்கநாதர் சந்நிதிக்கு ரெண்டுவருஷத்துல ஒருமுறை போவாங்களா ? அதுவே சந்தேகம் தான். ஐய்யங்கார்வாள் புளியோதரை சூப்பரா இருக்கும்ன்னு கேட்டுக்கேட்டு காதே புளிச்சு போச்சு. ரெங்கநாதர் கோவில் புளியோதரை மண்ணு மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி மண்ணும் இருக்கும்.

ஏன் பதிவு போடலைன்னு கேட்டு என்னோட கூகிள் ஐடிக்கு நூறு பேருக்கு மேல மெயில் பண்ணி இருந்தாங்க. இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின பெங்களூர் மற்றும் மும்பை வாசகிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

Monday, May 11, 2009

மனிதவள மேம்பாட்டுத்துறை - கோபிநாத்தின் நீயா நானா !

கோபிநாத் நடத்தும் நீயா நானாவில் மனிதவள மேம்பாட்டு துறையில் வேலை பாக்கறவங்களும் மத்தவங்களும் கலந்து கிட்டாங்க. சுவையான விவாதங்கள்(!!) இருந்தன. உடனே இந்த பதிவு !!!

இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் மனிதவள மேம்பாட்டு துறைக்கு போதிய அளவு மரியாதையோ / அதிகாரமோ கொடுப்பது கிடையாது. சும்மா ஏதோ பேச்சுக்கு போர்டு மீட்டிங் / பாலிசி மீட்டிங் / XXXXX மீட்டிங் எல்லாவற்றிலும் ஒரு HR மேனேஜர் இருப்பார். அவ்வளவு தான். இன்றும் HR ஒரு necessary evil என்கிற கண்ணோட்டம் தான்.

Ethics :-
டெக்னிக்கல் இன்டர்வியூ க்ளியர் பண்ணிட்டு, HR ரவுண்டு வந்தா முதல் கேள்வி "நீ எப்ப ஜாயின் பண்ணுவன்னு தான்" . அடுத்த அஞ்சி நிமிஷத்துல ப்ராஜெக்ட் குறித்து சொல்லி "ஏன் நீங்க அடுத்த வாரமே ஜாயின் பண்ணனும்ன்னு விலாவாரியா விளக்குவாங்க". வேலை பார்த்து வரும் கம்பெனியோட நோடீஸ் பீரியட் பத்தி எல்லாம் கவலையே படமாட்டாங்க.

common sense :
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் காமன்சென்ஸ் கூட ரொம்பவே கம்மி ! சென்னையில 102 டிகிரி வெய்யில் அடிக்கும். எந்தவித client interaction இல்லாம வேலை பார்த்துகிட்டு இருக்கற employees கிட்ட வந்து Tie & shoe எல்லாம் எதிர்பார்ப்பாங்க. கேட்டா கம்பெனி பாலிசி.

ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு மிக பிரபலமான IT service கம்பெனி மூலமாக ஐரோப்பா வந்தார். அவங்க கம்பெனி பாலிசிப்படி பக்கா பார்மல் டிரஸ் போட்டுக்கிட்டு ஆபீஸ் வருவார். (blazer, tie etc). வந்த எடத்துல எல்லாரும் பெர்முடா போட்டுக்கிட்டு டேபிள் மேல காலை வச்சிக்கிட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா அவர் இருந்த மூணு மாசமும் பார்மல் டிரஸ்ல போக சொல்லி இந்தியாவுலேந்து ஒரே டார்ச்சர். கேட்டா கம்பெனி பாலிசி.

நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில் வெளிநாடு செல்லும் அனைவருக்கும் Travel Facilitation program நடக்கும். கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத ஒரு HR வந்து ஏதாவது உளறுவாங்க. அதை கேட்டுக்கிட்டு ஒருசில அம்மாஞ்சிகளும் அமெரிக்கா போகும் விமானத்துக்கு கோட் & சூட் போட்டுக்கிட்டு வருவாங்க. கேட்டா immigration கடக்கும் போது ஒரு நல்ல impression கொடுக்கனும்ன்னு சொல்லி இருப்பாங்க. (பக்கத்துக்கு ஊருக்கு கூட போகாத ஏதாவது ஒரு HR கொண்டு வந்த பாலிசியா இருக்கும்.) இதே தொல்லை விசா இன்டர்வியூவுக்கும் உண்டு.

Integrity :
employee referral program இந்தியாவில் recruitment க்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிகளில் முக்கியமான ஒண்ணு. ஆனா பல சமயம் HR recruiter கிட்டேந்து ரெஸ்பான்ஸ் வராது. HR recruiter வோட ப்ரைமரி முறை கன்சல்டன்ட் கிட்டேந்து ஆள் பிடிக்கறது தான். காரணம் யூகிக்க ரொம்பவே ஈசி.

இவங்க இப்படினா, நம்ப மக்கள் HR கிட்ட எதை கேக்கலாம், எதை கேக்கக்கூடாதுன்னு கூட தெரியாது. கொஞ்சம் கூட professionalism கிடையாது. அடுத்த கம்பனிக்கு ஏன் போறன்னு கேட்டா வரும் ஒரே பதில் "பர்சனல் ரீசன்" இல்லாட்டி ஏதாவது தேவையில்லாத பொய்.

கோபிநாத் நிகழ்ச்சியில் வழக்கம் போல பலர் உணர்ச்சிவசப்பட்டு பேச முயற்சி பண்ணினாங்க. HR கிட்டேந்து fake resume போட்டு வேலைக்கு வராங்கன்னு ஒரு குற்றச்சாட்டு. அதுக்கு பதில் HR லயும் பலர் fake resume போடறாங்கன்னு ! என்ன சொல்றது ! எல்லா எடத்துலயும் ஒரு கேள்விக்கு பதில் எதிர் கேள்வி தான் போல. இந்த கூட்டத்தை வச்சி உருப்படியான விவாதம் நடத்தறது ரொம்பவே கஷ்டம்.

ஒரு HR கல்யாணமான பெண்களை வேலைக்கு / ப்ராஜெக்டுக்கோ சேர்க்கமுடியாதுன்னு நியாயப்படுத்தினார். வேலை பிளான் பண்ண முடியாதாம். ப்ராஜெக்ட் வேலை பாதிக்கப்படுமாம். கம்பெனில அவரோட ரோலே அவருக்கு தெரியல. ஜென்டர் மற்றும் வயது காரணமா discrimination இருக்ககூடாதுங்கற ஒரு Basic அறிவு கூட இல்லை. இவர் எப்படி மேனேஜ்மண்ட கொடுக்கற பிரஷர் ஹேண்டில் பண்ணுவார் ?

Thursday, May 7, 2009

கிச்சடி - சாரு, இசை மற்றும் நான்

சாருநிவேதிதாவின் இசைக் குறித்தான கருத்துக்களை அவரது தளத்தில் தொடர்ந்து படித்து வந்துள்ளேன்/வருகிறேன்.  அவர் கொடுத்தப் பல சுட்டிகளை கிளிக் செய்து பாடல்களை கேட்டும் உள்ளேன். சிலது எனக்கு பிடித்தும் இருக்கின்றன. ஆனால் அவரது இசைக் குறித்தான எந்த புத்தகமும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஆதலால் அவரது கருத்துக்களை விமர்சனம் செய்யவோ / பாராட்டவோ உரிமை இருக்கிறதா/இல்லையா என்று தெரியவில்லை.

தொண்ணூறுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்த தாயுமானவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். அவனது அண்ணன் மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீராம் அந்தக்காலத்திலே சாருவின் "தல" ரசிகர்கள். அவர்கள் மூலமாக சாரு மற்றும் அவரது எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். பேன்சி பனியன் மற்றும் அவரது வேறு சில சிறுகதைகளை படித்ததாக ஞாபகம்.  அந்தச்சமயத்தில் கையில் கிடைக்கும் புத்தகங்கள் எதுவென்றாலும் படிப்பேன்.  பிடித்தது / பிடிக்காதது / இலக்கியம் / குப்பை என்ற எந்தவொரு வேறுபாடுமின்றி. உண்மையை சொல்வதென்றால் அந்த வேறுபாடுகள் எனக்கு பல சமயங்களில் புரிவதில்லை. சுஜாதாவின் எழுத்துக்களை பல்ப் பிக்ஷன் என்ற வகையறையில் படித்து பின்பு அதுவே இலக்கியம் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டு.    

இந்த நண்பர் குழுமம் மூலமாக எனக்கு கிடைத்த மற்ற அறிமுகங்கள் ஓஷோவும்,  உலக திரைப்படங்களும்.  ஆனால் ஒருசில மாதங்களிலையே தெளிவுப் பெற்று இன்றிருக்கும் மத்திய தர வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டினேன்.  இவ்வகை வாழ்க்கை தரும் அனுபவங்கள் அலாதியானது.   "ஏக்கம்" என்ற சொல்லின் அர்த்தம் வேறு எவ்வித பிரிவிலும் புரிய உழைக்க வேண்டியிருக்கும்.

உழைப்பு என்று எழுதியவுடன் ஒரு நினைவு.  இதுவரை எதையும் ஆராய்ந்து எழுதுவதற்காக உழைத்ததில்லை. நேற்று சச்சினின் ஒருநாள் போட்டி செஞ்சுரிகளை ஆராய்ந்தபோது ஒரு மகிழ்ச்சி.  அதை எழுதியபோது ஒரு திருப்தி.  யாரும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிந்தபோது ஒரு தெளிவு.  இவை அனைத்தும் சாரு யுவனுக்கு எழுதிய பதில் மூலமாகவே சாத்தியப்பட்டது.

எனக்கும் இசை பயின்றவர்கள் பாடும் பாடல்களை விட இசை தெரியாதவர்கள் பாடும் பாடல்கள் கேட்க பிடிக்கும். ஒருவித rawness தான் காரணம் என்று நினைக்கிறேன். ஸ்ருதி, ராகம், ஸ்வரம், அபஸ்வரம் என்று குழம்ப வேண்டியதில்லை. இன்று தொலைக்காட்சியில் நடைபெறும் இசை தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்ப / தகுதி சுற்றுக்களில் கேட்கும் பாடல்களே சாட்சி. ஒருசில வரிகளில் கவரும் பல தனித்துவமான குரல்கள்.  மெதுவாக தேய்ந்து ப்ரொபஷனல் குரலாக மாறுவதை கண்டு வந்துள்ளேன். எனது இசையார்வம் பின்நவீனத்துவரகமா என்றறிய பதினைந்து கட்டளைகளை பலமுறை படித்தும் பயனில்லை.  எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும். ஆதலால் பயப்பட அவசியம் இல்லை என்று எனக்கு நானே தேற்றிக்கொண்டேன்.  அதைத் தவிர எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம் நாதஸ்வரம்.  நான் ஸ்கூல் / காலேஜ் படித்துக் கொண்டு இருந்த காலக்கட்டம். மாலையில் நண்பர்களுடன் கூடும் இடம் ரயில்வே பிளாட்பாரம் தான். தினமும் வீட்டில் இருந்து சைக்கிள் பிரயாணம். போகும் வழியில் ஷேக் சின்னமௌலானாவின் வீடு. அங்கு அவரது இரு புதல்வர்களும் தினம் தவறாது சாதகம் செய்வார்கள். பல சமயங்களில் அவர்களின் இசையை நின்று  கேட்டுவிட்டு மெதுவாக நண்பர்கள் குழாமுடன் இணைந்துள்ளேன். இசை என்னை மிகவும் கவர்ந்த நிமிடங்கள் அவை தான். 

இளையராஜாவை வட இந்திய மக்கள் கேட்பதில்லை. ரகுமானின் தில்லி - 6 பாடல்களை கொண்டாடுகிறார்கள் என்று எழுதி பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதியதால் இந்தக் குளறுபடி என்று ஒரு திருத்தம் செய்துள்ளார். அதே போன்று தான் மொரோக்கோவின் இசை வடிவங்களை பிரான்ஸ் நாட்டில் கேட்பதும். மொரோக்கோ நாட்டை சேர்ந்த வம்சாவழியினர் ஒரு மில்லியனுக்கும் மேல் பிரான்சில் வசிக்கின்றனர்.

எனக்கு ஒரு உணவகம் பிடித்து விட்டால், அங்கேயே அடிக்கடி செல்வேன். அதில் அலுப்பு வந்தால் மட்டுமே மாற்றம் வரும். இதில் பல குறைகள் இருந்தாலும் எனக்கு சரியாகவே வருகிறது. அதே போன்றே இசையும். பல புதிவித இசை வடிவங்கள் கேட்கும் பொழுது பிடிக்கிறது. ஆனால் மற்றவைகளை தேடிச்செல்ல முயற்சி செய்வதில்லை. இதில் உள்ள தேக்கமோ / குறைகளோ பிறர் சொன்னால் தான் புரிகிறது. ஆனால் ஒருசில நிமிடங்கள் கடந்தால் புரிய மறுக்கின்றது.  அதற்காக நாட்டார் கலை / செவ்வியல் கலை மற்றும் அதனை சான்ற குளறுபடிகள் என்று எழுத விருப்பமில்லை.

சாருவின் பல கட்டுரைகளில் பிடித்தமானது அவரது உணர்வுப்பூர்வமான எழுத்து மற்றும் மெல்லிய நகைச்சுவை. அதே சமயம் அவரது மையக்கருத்தை புரிய வைக்க /  அழுத்தம் கொடுக்க அவர் கொடுக்கும் பல உபரித் தகவல்கள் தவறாக இருப்பதாக தோன்றும். துருக்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஓரான் பாமுக் குறித்த கட்டுரையில் பல தகவல் பிழைகள் இருந்ததாக நினைவு.  அதைக்குறித்து ஒரு நண்பருடன் பேசியபொழுது அவரின் கருத்து வியப்பை அளித்தது. சாருவின் கட்டுரைகளில் "இம்பாக்ட்" மட்டுமே பார்க்கவேண்டும் என்றார். சரி என்று விட்டுவிட்டேன்.

தூக்கம் வருகிறது. நான் கடவுள் படப்பாடலை raaga.com ல் போட்டுவிட்டேன். தூங்க வேண்டும்.

எனது எழுத்து நடை கோழிக்கிறுக்கலை போன்று இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறினார். பள்ளியில் லீவ் லெட்டர் எழுதுவது மட்டுமே எனக்கு எழுத தெரிந்த எழுத்து. அதே கவனத்துடன் எழுத முயன்றேன். சரியாக வந்து இருக்கிறதா என்று தெரியவில்லை.  பார்க்கலாம்.

Friday, May 1, 2009

கிச்சடி 01 / 05 / 09

ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.


சமீபத்தில் ட்விட்டர்ல பார்த்த/கவர்ந்த ஒரு மெசேஜ் :-


நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?


தமிழ்மணம் முகப்பு பகுதில "எங்கே பிராமணன் - நிறைவு பகுதி" எப்போ வரும் ?


ஷெல் நிறுவனம் கடந்த வருடம் 8 பில்லியனுக்கும் மேலாக லாபம் ஈட்டி கார்ப்பரேட் வரலாறு படைத்தது. கடந்த மூன்று மாதங்களாக புதிதாக வேலைக்கு யாரையும் சேர்க்காமல் நிறுத்தி வைத்து இருக்கிறது. என்ன காரணமா இருக்கும் ?


என்னோட கம்பெனில பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து செய்த ஒரு ஆப்படிக்கும் பிளான். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதில் உங்களுக்கு ஏதாவது முக்கிய முரண்பாடு தெரிகிறதா ?





சமீபத்தில் படித்த புத்தகங்கள் :-



1) Murder


2) Fatal Attraction


3) Crime in London


4) Murder


5) The Testament of Adolf Hitler


6) சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்


7) எங்கே பிராமணன்.


உண்மையிலே ஒரு பத்து வாக்கியம் கொண்ட கட்டுரையோ / கதையோ கூட எழுத தெரியல. அதனாலே அடிக்கடி கிச்சடி எழுத வேண்டியதா இருக்கு.


சமீப காலமா வலையுலகத்துல politically correct பதிவுகள் மட்டும் தான் எழுத முடியுது. ஏதாவது நக்கலோ / satire எழுதினா யாராவது வந்து ரகளை பண்றாங்க. பதிவுலக தீவிரவாதம்.


பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்துமதம் - பா ஜ க - இந்துத்துவா. உண்மையிலே மேலோட்டமா எழுதறத குறிப்பால உணர்த்துவதாம் இந்த தலைப்பு. இது தெரியாம என்னனவோ நினைச்சிட்டேன்.


இந்திய கிரிக்கெட் போர்டு ஐ.சி.எல்ல விளையாடினவங்க எல்லாம் மறுபடியும் IPL / இந்திய அணிக்கு வருவதற்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க. எங்க ஏரியா பையன் ஒருத்தன் ICL சென்னை அணில விளையாடறான். ICL இந்திய அணிக்கு கூட கேப்டனா இருந்தான். சதீஷ்ன்னு பேரு. மறுபடியும் ஒரு சுத்து வந்தா நல்லா இருக்கும்.


இன்னும் ஒரு வாரத்துக்கு கண்தானம் விட்ஜெட் வச்சி இருக்கலாம்ன்னு இருக்கேன். யாருக்காவது ஆர்வம் இருந்தா அந்த லிங்க் கிளிக் பண்ணி படிச்சு பாருங்க.

Tuesday, April 14, 2009

கிச்சடி - 14/04/2009

சில பேருக்கு மனசுல ஓடற உணர்ச்சிகள் முகத்துல அப்படியே பிரதிபலிக்கும். அவங்களை எல்லாம் வெள்ளந்தி என்றும், மனசுல ஒண்ணு வச்சிக்கிட்டு வெளில வேற மாதிரி நடிக்க தெரியாதவங்கனும் சொல்லுவாங்க. அதுவே வேற சில பேரு என்ன பிரச்சனைனாலும் முகத்தை ஒரே மாதிரி வச்சிப்பாங்க.(ரங்கமணிகள்) இவங்களை எல்லாம் "என்னமா நடிக்கறா/நடிக்கறான்" பாருன்னு சொல்லுவோம். ஆனா, சினிமால அஜித் எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை முகத்துல காட்டினாலும் அவருக்கு நடிக்கவே தெரியலன்னு சொல்றாங்க. என்ன அநியாயம் ?

நான் ஒரு சிறுகதை எழுதி வச்சி இருக்கேன். ஆனா அதுக்கு முடிவு எழுத தெரியலை. இதுக்கு உதவி செய்ய ஏதாவது புத்தகம் இருக்கா ?

கல்லூரி சிறுகதை போட்டில வெற்றி பெற்ற பாலாஜிக்கு வாழ்த்துக்கள். கார்க்கியின் கதை டாப் 10ல வராதது பயங்கர அதிர்ச்சி தான். எனக்கு அவரோட கதையும் ரொம்பவே பிடிச்சி இருந்தது. Tastes differ !

Augusta National Golf tournament பைனல் ரவுண்ட் பாத்தேன். கார்பரா, கென்னிபெரிய ஷூட் அவுட்ல தோற்கடித்தார். டைகர் வுட் 17/18th ஹோல் ரெண்டுமே bogey. ஆறாவதா வந்தாரு. Is tiger woods capable of choking ?

தமிழ்ல எழுதும்போது எழுத்து பிழைகள் அதிகமா வருது. சரின்னு, மனசுல தோணும் எல்லா கருமாந்திரத்தையும் ஒரு நோட் புக்ல எழுதினேன். ரெண்டு மூணு நாள் கழிச்சி அதே மாதிரி NHM மூலமா வூட்டுல இருக்கும் கணிப்பொறில டைப் பண்ணினேன். இன்னொரு நாளைக்கு Google Transliterate மூலமா முயற்சி பண்ணினேன். கடைசி முறையில் பயங்கர பிரச்சனை. பலவித "ந" , "ன", "ண" ஆப்ஷன் வரும்போது எதை செலக்ட் பண்ணறதுன்னு குழப்பம் வருது. நோட்ல எழுதும் போது நூறுல ஒரு பத்து வார்த்தைகள் தவறா எழுதினா, இதுல முப்பது வார்த்தைக்கும் மேல தகிடுதத்தம் தான். I suppose language skills are more habitual.

கடைசியாக ஒரு சமையல் குறிப்பு.

அராபியாட்டா வேப்பம் பூ ரசம்

தேவையானவை :

அராபியாட்டா சாஸ்
புளி சிறிதளவு
சிகப்பு மிளகாய்
வேப்பம் பூ
துவரம் பருப்பு
இஞ்சி சிறிதளவு
சீரகம், கடுகு, உப்பு, எண்ணை தேவையான அளவு.

செய்முறை :

தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைக்கவும். அதனுடன் அராபியாட்டா சாஸ்(பழங்களுடன்), அரைக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ரசப்பொடியை சேர்த்து அடுப்பில் கொதிக்கவிடவும். (ரசப்பொடியின் வாசனை போகும் வரை)

மற்றொரு அடுப்பில் வாணலியில் எண்ணையை விட்டு கடுகை போடவும். கடுகு தாளித்தவுடன் சீரகம், இஞ்சி, துவரம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை கிள்ளி போடவும். கடைசியில் வேப்பம் பூவையும் சேர்த்து வறுக்கவும். (கருகாமல் பார்த்துக்கொள்ளவும்)

கொதிக்கும் ரசத்துடன் இவற்றை சேர்த்தால் அராபியாட்டா வேப்பம் பூ ரசம் ரெடி.

சற்றே புளிப்புடன் துவர்ப்பு கலந்து சுவையுடன் கூடிய இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Management Lesson : If you can't buy tomato before easter vacation, look up on your refrigerator and think sensible.

Friday, April 3, 2009

கிச்சடி - 03/04/2009

புவியீர்ப்பு சக்தி

வேறுபட்ட, வித்தியாசமான, குடும்பப்பாங்கான, மசாலாவான, வகையறுக்கப்படாத - இந்த வகையறையில் வரும் எந்த தமிழ் / ஹிந்தி படமா இருந்தாலும் ஒரு நிச்சயமான காட்சி ஒற்றுமை இருக்கு. அதாவது நம்ப ஹீரோ, ஹீரோயின் வூட்டுக்கு முதல் முறையா வராருன்னு வச்சிக்கோங்க. ஹீரோயின் வூட்டுல யாரும் இருக்கமாட்டாங்க. அந்த அம்மா, அப்பதான் குளிச்சுட்டு துண்டு கட்டிக்கிட்டு வெளில வருவாங்க. அவங்களோட துண்டுக்கும், புவியீர்ப்பு சக்திக்கும் ஒரு பைட் நடக்கும். இயக்குனரோட முடிவு நியூட்டனுக்கு ஆதரவாவே இருக்கும்.பாட்டு நல்லா இருக்கே, படம் ஏதோ வித்தியாசமா இருக்குன்னு சொன்னாங்களேன்னு டெல்லி - 6 பாத்தேன். மரண மொக்க.

அடிக்க வராதீங்க. நான் காலா பந்தர்ங்கர ஹிந்தி வார்த்தைய வெண்மேகம்ன்னு புரிஞ்சிக்கற ஆளு. அதுவும் சப்-டைட்டில் இல்லாம வேற பாத்தேன். சோ, நீங்களும் ஒருமுறை பைட் பாக்க ஆசைப்பட்டா, மீ நோ அப்ஜெக்க்ஷன்.
********************************************

அன்புள்ள சுந்தர் மாமாவுக்கு,
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ? ஒரு வாரமா இங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல . அடிக்கடி கடுதாசு போடு. ஆனா போன முறை நீ எழுதினது சரியா புரியல. கடுதாசில கதை எழுதாத. இந்த மாதிரி சிம்பிள்ளா எழுது.

இப்படிக்கு
மணி
********************************************
Golden Handshake

ஸ்வன் கோரன் எரிக்சன் இங்கிலாந்துக்கு கால்பந்து கோச்சா இருந்தாரு. 2006ல அவர அந்த பதவிலேந்து நீக்கினாங்க. அதுக்கு 3-4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. 2007ல மான்செச்டேர் சிடின்னு ஒரு கால்பந்து கிளப்புக்கு கோச்சா இருந்து பின்ன நீக்கப்பட்டாரு. மறுபடியும் 4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. நேத்திக்கு மெக்சிகோ அணி கோச் பதிவிலேந்து நீக்கி இருக்காங்க. இந்தமுறை 7 மில்லியன் போல.

நான் முன்னாடி வேல செஞ்ச கம்பெனி CEO பேரு கார்லி பியோரினா. அவங்கள 2005ல வேலைய விட்டு தூக்கினாங்க. நஷ்ட ஈடா 20 மில்லியனுக்கு மேல கொடுத்தாங்கன்னு செய்தி வந்தது. இவங்க தான் போன வருஷம் தேர்தல் போது ஜான் மக்கைன் டீமுக்கு நிதித்துறை ஆலோசகர். ஜான் மக்கைன்னோட சேர்ந்து Golden Handshake ஸ்கீமுக்கு எதிரா குரல் கொடுத்தாங்க.

நான் கூட பதிவு எழுதறதுலேந்து நீங்கிக்க ரெடி. சாமியோவ் !
*******************************************

சின்ன வயசுல, எதாவது துடுக்குத்தனம் பண்ணினா, அப்பா ஆபிஸ்லேந்து பூத கண்ணாடில பாத்துக்கிட்டு இருக்காருன்னு சொல்லி மிரட்டுவாங்க. கொஞ்சம் வயசு ஆனதுக்கு பிறகு பண்ற தப்பு எல்லாத்தையும் பாக்க சாமி இருக்காருன்னு பயம் காட்டுவாங்க. இப்ப இது எல்லாத்தையும் உண்மை ஆக்கிடுவாங்க போல. கூகிள் ஸ்ட்ரீட் வியூ உபயோகிச்சு பாருங்க.
**********************************************

ப்ளாக்ல யாராவாது குழந்தை போட்டோ போட்டாக்க, நான் அந்த பதிவ நிச்சயமா பாப்பேன். வரும் எல்லா பதிவுக்கும் ஒரு பதில் பின்னூட்ட டெம்ப்ளேட் இருக்கு. "மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.
******************************************

டெம்ப்ளேட் பத்தி வேற எழுதி இருக்கேன். பொதுவாவே, கட்டுமானத்துக்கு கட்டுப்பட்டவன் நான். ஏ ஜோக், நகைச்சுவை துணுக்கு எதுவும் ஸ்டாக் இல்ல. அதுனால

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
உன் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பியோடு தான்.

(எங்கேயோ, எப்பவோ படிச்சது. யாரு எழுதினதுன்னு தெரியாது. இது நல்ல கவிதையா தான் இருக்கணும். எனக்கே ஞாபகம் இருக்கே.)

Thursday, March 26, 2009

கிச்சடி - 26/03/2009

எங்க ஊருல மூனு வாரம் முன்னாடி turkish airline விமானம் ஆக்சிடென்ட் ஆச்சு. அந்த நியூஸ் முதல்ல வெளிவந்த இடம் twitter.com (ஆக்சிடென்ட் ஆன ரெண்டு நிமிஷத்துல). விமானத்த விட்டு தப்பிக்கும் போதே யாரோ மொபைல் மூலமா அப்டேட் பண்ணி இருக்காங்க.

சுயசரிதை

பழைய நினைவுகள் குறித்தான இன்றைய ஞாபகத்த வச்சி எழுதனுமா, இல்லாட்டி குறிப்புக்கள தேடி கண்டுபுடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதனுமா ?

அலுவலகத்துல உங்கள சுத்தி வேலை பாக்கற ஒவ்வொருத்தருக்கா வேலை போச்சுனா உங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?

கேள்விகள் எல்லாத்துக்கும் கேள்விக்குறி அவசியமா.

எங்க வீட்டுலேந்து நூறு மீட்டர் தூரத்துல ஒரு டென்னிஸ் டோர்னமன்ட் நடந்தது. செமிபைனல் பாக்க போயிருந்தேன். நாடல், மொன்பில்ஸ்ன்னு ஒரு பிரெஞ்சு ப்ளேயர தோக்கடிச்சாரு. சரின்னு மேட்ச் முடிஞ்சவுடன கிளம்பினேன். அடுத்த மேட்ச்சும் அதே டிக்கெட்ல பாக்கலாம்ன்னு சொன்னாங்க. நம்ப லியாண்டர் பேஸ் டபுல்ஸ் விளையாட வந்தாரு. எனக்கு பயங்கர ஆச்சரியம். சுத்தமா எதிர்பார்க்கல. என்னால முடிஞ்ச vocal சப்போர்ட் கொடுத்து ஜெயிக்க வச்சேன் ! ஆனாலும் மேட்ச் முடிஞ்சவுடன அவர் கிட்ட போயி ஆட்டோகிராப் வாங்க ஒரே கூச்சம். வாங்கல. ஏன் இப்படி ?

டூ வீலர், பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் எங்கயாவது குத்தினா அத ஆங்கிலத்துல ஆக்சிடென்ட்ன்னு சொல்றோம். அது ஏன் விமானத்துக்கு மட்டும் crashன்னு சொல்லணும் ?

உங்க அலுவலகத்துல எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தா, நீங்க புது வேலை தேடணுமா இல்லாட்டி ப்ளாக் எழுதனுமா ?

பத்து வருஷம் முன்னாடி ஒரு எடத்துல நான் நுகர்ந்த வாசனையை இப்ப நினைச்சாலும் நுகரவும், உணரவும் முடியுது. யாருக்காவது இது மாதிரி அனுபவம் இருக்கா ? இதுக்கு பேரு (term) என்ன ?

பத்தி எழுத்துல எத்தன சதவீத கேள்விகள், எத்தன சதவீத சேதிகள் இருக்கணும் ? பத்தி எழுத்து இலக்கணம் ஸ்கூல் சிலபஸ்ல இருந்ததா ? வெண்பா இலக்கணம் ஏன் ஞாபகம் வந்து தொலையமாட்டேங்குது ? கூகுள்ல தேடி எழுதனுமா இல்லாட்டி ஞாபகம் இல்லன்னு விட்டுடலாமா ?

எழுதினத திருப்பி படிக்கும் போது பார்க்கற தவறுகள திருத்தி மாத்தலாமா ? இல்லாட்டி இது தவறா ?

கடைசியா இந்த கவிதையோட இத முடிச்சுக்கறேன்.

Thursday, March 5, 2009

கிச்சடி - பதிவுகள், பதிவர்கள், பின்னூட்டங்கள், கிசுகிசு

ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி பதிவு எழுதலாம்ன்னு முடிவு பண்ணி ஏதோ கிறுக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல ஜ்யோவ்ராம் சுந்தரின் காம கதைகள், லக்கி லுக்கின் சட்டி கதைகள்ன்னு பதிவுலகமே பரபரப்பா இருந்தது. தமிழ்மணமே இது நியாயமா, நீதியான்னு மனோகரா ஸ்டைல்ல ஒவ்வொருத்தரும் அறவழி பதிவுகள் எழுதி திரட்டிய கலாய்த்த நேரம். நான் ஏதோ ஷகீலா பட ஸ்டைல்ல என்னோட பதிவுக்கு பேரு வைக்க போக, தமிழ்மணம் கிட்ட எவ்வளவு மன்றாடியும் சேர முடியல. ஆனா விடாம டெய்லி தமிழ்மணம்ல "சேர்க்கை நிலவரம்" பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ என்னைய மாதிரியே சேர முயற்சி செஞ்ச மற்றொரு வலைப்பூ http://www.tamilish.com/

எந்த திரட்டிளையும் சேர முடியாட்டியும் நான் விடாம அந்த கிறுக்கல தொடர்ந்து 21 நாள் எழுதினேன். அதுக்கு அப்புறம் எனக்கே தாங்க முடியாம ஒருநாள் எரிச்சல்ல டெலீட் பண்ணினேன். அந்த 21 நாள்ல என்னோட அந்த பதிவ ( உளரல) படிச்சவங்க எண்ணிக்கை 4500. எந்த திரட்டிளையும் இல்லாம இவ்வளவு ஹிட்ஸ் வந்ததுக்கு ஒரே காரணம் :- பேரு தான் ! பெயரில் என்ன இருக்கிறதுன்னு கேட்பவர்களுக்கு ! (சின்ன வயசுல சக்கரத்தாழ்வார் சன்னதிய என்னோட நண்பன் 21 முறை சுத்துவான். எதுக்குடா 21 முறை சுத்தறன்னு கேட்டா, சுத்தி முடிக்கற போது அவன புடிச்சி இருக்கற சனியன் எல்லாம் ஓடி போயடும்ன்னு சொல்லுவான்.அவன் பத்து ரவுண்ட் முடிக்கறதுக்கு முன்னாடியே நான் மடப்பள்ளிக்கு ஓடிடுவேன்)
மடப்பள்ளி - லட்டு, அதிரசம்,முறுக்கு கிடைக்குமிடம்.
*******************************************

பதிவுலகத்துல உள்ள ரெண்டு தோழர்களோட நட்பு நட்பிலக்கணத்தின் சான்றாக பிற்காலத்தில் புகழப்படும் என்பது உறுதி. ரெண்டு பேருமே சாருவின் சிஷ்யகோடிங்க. ஒருத்தருக்கு எழுதுவதில் வெறுப்பு வந்து வாசிக்க ஆரம்பித்தால் அடுத்தவரும் அதே. ஒருவருக்கு கம்ப்யூட்டர் கிடைக்காமல் போனதால் அடுத்தவர் அவரிடம் இருந்த லேப்டாப்பை குப்பைதொட்டியில் போட்டதாக ஒரு வதந்தி.
**************************************

ஆறு வருஷம் முன்னாடி என்னோட நண்பனின் கல்யாணத்துக்காக சென்னை வந்து இருந்தேன். ஸ்கூல் மக்களை எல்லாம் மறுபடியும் பாக்கறதுக்கு ஒரு சான்ஸ். எல்லார் கிட்டயும் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு சாமின்னு ஒரு நண்பர் என்கிட்ட வந்து "உன்னைய மாதிரியே இன்னொரு பிரம்மகத்தி பெர்முடா போட்டுக்கிட்டு கல்யாணத்துக்கு வந்து இருக்கு பாருன்னு சொன்னாரு". அப்புறம் விசாரிச்சதுல அவரு என்னோட நண்பன் வேல செஞ்ச cricinfo நிறுவனத்தின் பாஸ்ன்னு சொன்னாங்க. சிறிது காலம் முன்பு வரை நான் படித்து வந்த பதிவர் இவரும்,மருத்துவர் ப்ருனோவும் மட்டும் தான். தற்செயலா இவர் எழுதின சிறுகதை ஒண்ண படிச்சேன். நல்லவேளையா இவரு இப்போ சிறுகதை எழுதறது இல்ல !
*************************************

எனக்கு சமீபகாலமா தமிழ்ல பிடிக்காத வார்த்தைனா "யூத்" தான். அத வச்சி ஒரு மூத்தவர் பண்ற அலும்பு இருக்கே ! யப்பா சொல்லி மாளாது.
*************************************

வாமு கோமு எழுதின கள்ளி நாவல் படிச்சு முடிச்சேன். இன்டர்நெட்ல ப்ரீயா குட்டி கதைகள் படிச்சுட்டு மக்கள் ரொம்ப ஓவரா திட்டறாங்க. இத விட மோசமா எல்லாம் நான் பத்திரிகைல எழுதின போது ஒருத்தனும் திரும்பி கூட பாக்கலன்னு சாரு சொல்றது ஒருவகைல உண்மையோன்னு யோசிக்க வச்சது.
***********************************************

ராமு :- எதுக்கு ரவி வர்மா பத்தி பதிவு இருக்கற ஒவ்வொரு எடத்துலயும் போயி மே ஏ வே கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்க ?
சோமு :- ரவி வர்மா ஒரு பிராடு. மக்கள் தேவை இல்லாம தூக்கி வச்சி ஆடறாங்க. வேணும்னா கானாலிசாவ ரிலீஸ் பண்ண சொல்லு. நான் நிறுத்தறேன்.
ராமு :- உனக்கு பிடிக்கலன்னா விட வேண்டியது தான. அவரு தான copy right வச்சி இருக்காரு. அத தவிர, அவரு வேறு எவ்வளவோ சூப்பர் படம் வரைஞ்சி இருக்காரே.
சோமு :- அப்புறம் எதுக்கு அவருக்கு பாராட்டு விழா, டாச்ற்ரோ பட்டம் ? மக்களுக்கு சரியான தகவல் போய் சேரனும். சரியான தகவல் தெரியாம தான் மக்கள் செயல்படறாங்க. பத்திரிகை காரங்க தப்பு தப்பா ரிப்போர்ட் பண்றாங்க. சமீபத்துல கூட இதுக்காக தான் நான் வீட்டுடைமை பத்தி எழுதினேன்.
ராமு :- ஐயய்யோ ! (மராத்தான் தூரத்த 100 மீட்டர் ச்ப்ரின்ட் ஸ்பீட்ல ஓடியபடியே)


[இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை. எந்த வனில்சன விருது நாயகரை பற்றியும் அல்ல. இதே போன்று கற்பனை கதையோடு வரும் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த நிகழ்வும் கற்பனையே !]
*******************************************

நான் பதிவு எழுதாம ஜாலியா இருந்த போது எழுத சொல்லி "சினிமா சினிமா" தொடர் ஓட்டத்துக்கு கூப்பிட்டவங்க திரு ராதாகிருஷ்ணன் மற்றும் தாமிரா. "எழுதிட்டேன்னு" சொல்லியும் ஒரு பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும். இந்த வாரம் குட்ட மேட்டர் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படறதா ஒரு தகவல்.