Friday, June 26, 2009

கிச்சடி - சிதைவுகள்

மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.

உரையாடல் சிறுகதை போட்டிக்கு ஒரு பிரபல பதிவரின் பதிவில் எனது சிறுகதையை பிரசுரித்துள்ளேன். பரிசு கிடைக்குமா ?

பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது என்று எழுதினால் நான் இந்துத்துவவாதியா ?

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இந்த குறளை படித்துவிட்டு அடுத்தவரை நாண வைப்பதற்காக நல்லவற்றை செய்ய ஆரம்பித்துள்ளேன். இது சரியா ?

சரி இல்லையென்றால் தவறா ?

தமிழில் ஒரு நல்ல ஆண்பெயர் கூறுங்களேன்.

பெயருக்கு மொழி உண்டா ?

மொழிக்கு பெயர் இருக்கும்போது பெயருக்கு மொழி இருக்கக்கூடாதா ?

வித்தியாசம் என்ற புதரில் என்றாவது அகப்பட்டதுண்டா?

பல்ப் பிக்ஷன் என்ற வகையறுக்கப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே எனக்கு படிக்க பிடிக்கறது. அப்படியென்றால் நான் வெகுஜன எழுத்தாளர்களை ரசிக்கும் இலக்கியவாதியா ?

கோர்வையற்ற எண்ணங்களை எழுத்தாக மாற்றும் இலக்கியவாதிகளிடம் ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம்.

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை பல லட்சங்கள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

நான் லீனியர் முறையில் எழுதப்படும் நாவல்கள், சிறுகதைகள் எப்படி படித்தாலும் புரியாதா ?

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை ஒரு லட்சம் காசுகள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?

முடியுமென்றால் எப்படி ?

பிரபலப்பதிவர் பலரின் பதிவுகளை படித்து அவற்றை பற்றி எழுதியும், அவற்றுக்கு தமிழிஷ்ல் வாக்களித்தும் வருவதற்கு பதிலாக கும்மாங்குத்து பதிவுகள் எழுதுவது மாதிரியாகவா ?

கடைசிப் பத்தியை எழுதாமல் இருந்து இருந்தால் இதை சிறுகதையாக அறிவித்து இருக்கலாமா ?

கதையின் முடிவில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்காவிட்டால் அது சிறுகதை என்ற இலக்கண வகையறையில் வராதா ?

இந்த சிறுகதை "உரையாடல்" அமைப்பின் சார்பாக நடைபெறும் போட்டிக்காக எழுதப்பட்டது.

22 comments:

Anonymous said...

:-)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................

Nathanjagk said...

இவரும் பாதிக்கப்பட்டிருக்காரு

மணிகண்டன் said...

வாங்க ராப்.

ஜெகநாதன் - கரெக்டா கண்டுபுடிச்சி இருக்கீங்க :)- profile ல பெங்களூர்ன்னு போட்டு இருக்கு. அங்க என்ன டைம் இப்போ ?

வெட்டிப்பயல் said...

:-)

Nathanjagk said...

இப்ப இங்க நேரம் மூணே முக்கால். இப்ப தூங்கப் ​போறேன். நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கேன்!

MSATHIA said...

ரசித்தேன். ;-))

Athisha said...

பிம்பிலிக்கி பிலாப்பி...மாமா பிஸ்கோத்து..

எம்.எம்.அப்துல்லா said...

//மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.

//

மணி அண்ணே உங்க மெண்டாலிட்டியும்,என் மெண்டாலிட்டியும் என்னவோ அதுதான் மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி

:)

Samuel | சாமுவேல் said...

//உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?//

கண்டிப்பா முடியும்

//முடியுமென்றால் எப்படி ?//

இதே மாதிரி இன்னும் ஒரு பதிவு போடுங்க

butterfly Surya said...

கிச்சடி - நல்ல சுவை..

இது கொத்து பரோட்டாவுக்கு எதிர் வினை இல்லையே..??

மணிகண்டன் said...

இதுவரை எதிர்வினை அந்தந்த போஸ்டில் உள்ள கமெண்ட் மூலமா தான் !

மணிகண்டன் said...

ராப், வெட்டிப்பயல், msathia, அதிஷா - நன்றி.

மணிகண்டன் said...

அப்துல்லா, நீங்க மட்டும் தான் பதில் கொடுத்து இருக்கீங்க :)- பரிசு உண்டு.

சாம் :- நீங்க மட்டும் தான் இந்த பதிவோட நோக்கம் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க.

Anonymous said...

சிந்து சொல்லறது உன்னுடைய கிச்சடி படித்தேன். நெஜமாவே எனக்கு ஒன்னும் புரியலை. எல்லாருக்கும் புரியற மாதிரி எதாவது எழுது. இப்படி போட்டு குழ்ழபாதே

பீர் | Peer said...

மணி, உங்க இமெயில் ஐடி என்ன?

Peer

சென்ஷி said...

:-))))

உண்மையிலேயே பதிவுலக வாசகர்களால் தீவிரமா கவனிக்கப்பட வேண்டிய பதிவு இது!

சாமியின் பின்னூட்டம் கலக்கல்.. தொடர்ந்து எழுதுங்க பாஸ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

மணிகண்டன் said...

***
உண்மையிலேயே பதிவுலக வாசகர்களால் தீவிரமா கவனிக்கப்பட வேண்டிய பதிவு இது!
***

அப்படி சொல்லுங்க சென்ஷி. நீங்க தான் நல்லவரு.

பீர், மெயில் அனுப்பி இருக்கேன்.

வாங்க முத்துலட்சுமி.

மணிகண்டன் said...

சென்ஷி - S.a.m.m.y வந்து உங்களுக்கு தமிழ்ல சாமியா ?

சென்ஷி said...

// மணிகண்டன் said...

சென்ஷி - S.a.m.m.y வந்து உங்களுக்கு தமிழ்ல சாமியா ?//

ஓ.. சா.ம்.மி.யா அவர்

♫சோம்பேறி♫ said...

நல்லா உடைக்கிறாய்ங்கய்யா கட்டுகளை..

மிடில் கிளாஸ் மெண்டாலிடிக்குப் பரிசுத் தொகை என்னனு finalize பண்ணிட்டு சொல்லுங்க.. வந்து பதில் சொல்றேன்.